நடுவானில் குடுமிப்பிடி சண்டை: பயணிகள் மீது வழக்குப் பதிவு

நடுவானில் குடுமிப்பிடி சண்டை: பயணிகள் மீது வழக்குப் பதிவு

2 mins read
6571da48-6b68-4689-8468-fbd02ce8e0a7
-

கோல்­கத்தா: தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் இருந்து கோல்­கத்­தா­வுக்கு வந்து கொண்­டி­ருந்த தாய் ஸ்மைல் ஏர்­வேஸ் விமா­னத்­தில் இரு இந்­தி­யப் பய­ணி­கள் குடு­மிப்­பிடி சண்டை போட்­டுக்­கொண்ட சம்­ப­வம் சமூக வலைத்­த­ளத்­தில் காணொ­ளி­யாகப் பரவி வரு­கிறது.

இது­கு­றித்து வழக்­குப் பதி­யப் பட்­டுள்­ள­தாக விமா­னப் போக்கு வரத்­துத் துறை அமைச்­சர் ஜோதி­ரா­தித்ய சிந்­தியா தெரி­வித்­துள்­ளார்.

"இந்­தியாவுக்கு வந்த நான்கு இந்­தி­யப் பய­ணி­கள் ஒன்று­சேர்ந்து விமா­னத்­தில் இருந்த மற்­றொரு இந்­தி­யப் பய­ணியை அடித்துத் தாக்­கி­யுள்­ள­னர். இது­போன்ற செயல்­பா­டு­களை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்தச் சண்டை தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது காவல் நிலை­யத்­தில் புகார் பதியப்பட்­டுள்­ளது," என அமைச்சர் தன் டுவிட்­டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிசம்­பர் 26 அன்று தாய்­லாந்­தில் இருந்து கோல்­கத்தா வந்த விமா­னம் புறப்­ப­டு­வ­தற்கு முன்பு இந்த சண்டை நடந்­த­தாக தாய் ஸ்மைல் ஏர்­வேஸ் தெரி­வித்­துள்­ளது.

பயணி ஒருவர் தனது இருக் கையைச் சாய்த்ததால் இந்த சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. விமா­னப் பணி­யா­ளர்­கள் சம்பந்தப்பட்ட பய­ணி­யிடம் இருக்­கையை நீங்­கள் சரி­செய்யாவிடில் உங்­க­ளுக்­குப் பின்­னால் அமரும் பய­ணி­கள் வெளி­யே செல்வது, வருவது சிரமமாகிவிடும் என்றும் தெரி­வித்­துள்­ள­னர்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பய­ணி­யு­டன் சக பய­ணி­கள் சண்­டை­யிட்டுள்ளனர். வாய் வார்த்தை கைகலப்பில் முடிய, விமா­னத்­தில் இருந்த ஊழி­யர்­களும் மற்­ற­வர்­களும் தாக்­கு­தலை நிறுத்த முயன்­ற­னர்.

"இந்தச் சம்­ப­வத்­தில் பய­ணி­க­ளுக்கு பெரிய காயம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை. சண்­டை­யில் சம்­பந்­தப்­பட்ட பய­ணி­கள் மது­பா­னம் அருந்தவில்லை. அதன்பிறகு பய­ணத்­தில் வேறு எந்த இடை­யூ­றும் ஏற்­ப­ட­வில்லை," என விமான நிறு­வ­னம் அறிக்கையில் கூறியுள்ளது.