தூய்மையான சென்னை: மக்களிடம் ஆலோசனை

தூய்மையான சென்னை: மக்களிடம் ஆலோசனை

1 mins read

சென்னை: மாந­கரைத் தூய்­மை­யாக வைத்­தி­ருப்­ப­தற்­கு­ரிய ஆலோ­ச­னை­களைத் தெரி­விக்க பொது மக்­கள் முன்­வர வேண்டும் என சென்னை மாந­க­ராட்சி நிர்வா­கம் கேட்­டுக்கொண்­டுள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில், மத்­திய அரசின் தூய்மை இந்­தியா திட்­டத்­தின் கீழ், சென்னை மாந­க­ராட்­சி­யில் உள்ள இரு­நூறு வார்டு­க­ளை­யும் திறந்­த­வெளி மலம், சிறு­நீர் கழிக்காத மாந­க­ர­மா­க­வும் குப்பை இல்­லாத மாந­க­ர­மா­க­வும் சான்று பெற மாந­க­ராட்சி சார்­பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக மாந­க­ராட்சி மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் பொது மக்­க­ளுக்கு ஏதே­னும் மாறு­பட்ட கருத்­து­கள் இருப்­பின் அவற்­றை­யும் தெரி­விக்­கு­மாறு மாந­க­ராட்சி வேண்டு­கோள் விடுத்­துள்­ளது.