சென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தனது உறவினரால் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் திமுக வட்டாரங்களில் அதிர்ச்சி நிலவுகிறது.
இது தொடர்பாக ஐந்து பேர் கைதாகி உள்ளனர்.
66 வயதான மஸ்தான் சென்னையில் வசித்து வந்தார். தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த அவர் கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் ஓட்டுநராக வேலைபார்த்து வந்த உறவினரான 26 வயதான இம்ரான் பாஷா என்பவர் ரூ.15 லட்சம் கடன் வாங்கியிருந்த நிலையில், அதை திருப்பிக் கேட்டுள்ளார் மஸ்தான். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, மஸ்தானைக் கொன்றதாக இம்ரான் ஒப்புக் கொண்டுள்ளார்.

