ஐந்தாம் நாளாக நீடித்தது ஆசிரியர்களின் போராட்டம்

ஐந்தாம் நாளாக நீடித்தது ஆசிரியர்களின் போராட்டம்

1 mins read

சென்னை: பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி இடை­நிலை ஆசி­ரி­யர்­கள் மேற்­கொண்டு வரும் போராட்­டம் நேற்று ஐந்­தா­வது நாளாக நீடித்­தது.

கடந்த 2009ஆம் ஆண்­டுக்கு பின்­னர் பணி­யில் சேர்ந்த இடை­நிலை ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் அதற்கு முன்பு பணி­யில் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் இடையே ஊதிய முரண்­பாடு இருப்­ப­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, முரண்­பா­டு­களைக் களைந்து சம வேலைக்கு சம ஊதி­யம் வழங்­கக் கோரி, இடை­நிலை ஆசி­ரி­யர்­கள் போராடி வரு­கின்­ற­னர்.

கடந்த 27ஆம் தேதி முதல் தங்­க­ளது குடும்­பத்­தா­ரு­டன் உண்­ணா­வி­ர­தம் மேற்­கொண்டு வரும் ஆசி­ரி­யர்­க­ளு­டன் பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­ மொ­ழி­நேற்று முன்­தி­னம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். எனினும் அது தோல்வியில் முடிந்தது.