கொலைகள் குறைய சாமியிடம் காவல்துறையினர் முறையீடு

கொலைகள் குறைய சாமியிடம் காவல்துறையினர் முறையீடு

1 mins read

வட­ம­துரை: புத்­தாண்­டில் குற்­றச் சம்­ப­வங்­கள் குறைய வேண்டி, திண்­டுக்­கல் மாவட்­டம், வட­மதுரை காவல்­நி­லை­யம் சார்­பில் அய்­ய­லூர் அருகே திண்­டுக்­கல்- திருச்சி சாலை­யில் உள்ள வண்டி கருப்­பண்­ண­சாமி கோயி லில் பொங்­கல் வைத்து கிடா வெட்டி வழி­பாடு நடத்­தப்­பட்­டது.

புத்­தாண்­டில் எந்­த­வித அசம்­பா­வி­த­மும் நடக்­கா­மல் இருக்க வேண்­டி­யும் கொலை, கொள்ளை போன்ற குற்­றச் சம்ப­வங்­கள் குறைய வேண்­டியும் கிடா வெட்டி விருந்து நடத்­தப்­பட்­ட­தாக காவல்­து­றை­யி­னர் கூறினர்.

வட­ம­துரை காவல் நிலைய அதி­கா­ரி­கள், வேட­சந்­தூர் காவல் நிலை­யம், எரி­யோடு காவல் நிலை­யம் அருகே உள்ள வேட­சந்­தூர் குற்­றப்­பி­ரிவு தனிப்­படை நிலை­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள், அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் கல­ந்து­கொண்டு வழி­பட்­ட­னர்.