17,000 பேருந்துகள்; லட்சக் கணக்கானோர் காத்திருப்பு

1 mins read

அரசு: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக மூன்று நாள்களில் இயக்கப்படும்

சென்னை: பொங்­கல் பண்­டிகையை முன்­னிட்டு, மாநில போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் சுமார் 17,000 பேருந்­து­களை இயக்க உள்­ளது. இதன் மூலம் லட்­சக்­கணக்­கா­னோர் பய­ன­டை­வர் என அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஆண்­டு­தோ­றும் பொங்­கல் பண்­டி­கை­யை­யொட்டி சென்னை, திருச்சி உள்­ளிட்ட பகுதி­களில் இருந்து ஆயி­ரக்­கணக்­கா­னோர் சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்­வது வழக்­கம்.

எனினும் இதற்காக ஏரா­ள­மா­னோர் முன்­கூட்­டியே இருக்­கைப் பதிவு செய்­து­வி­டு­கின்­ற­னர். தனி­யார் பேருந்­து­களில் பண்­டிகை காலத்­தில் பய­ணக்­கட்­ட­ணம் பல மடங்கு அதி­க­மாக வசூ­லிக்­கப்­படுகிறது.

இத­னால் ஊர் திரும்ப முடி­யா­மல் பலர் தவிப்­புக்கு ஆளாக நேரி­டு­வதால் தமி­ழக அரசு, கடந்த சில ஆண்­டு­க­ளாக பொங்­கல் பண்­டி­கைக்­காக சிறப்­புப் பேருந்­து­களை இயக்கி வரு­கிறது. அந்த வகை­யில் நடப்­பாண்­டி­லும் சுமார் 17 ஆயி­ரம் சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­படு­கின்­றன. தமி­ழ­கம் முழு­வ­தும் இச்சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­படும் என்­றும் இதன் மூலம் லட்சக்­க­ணக்­கா­னோர் பய­ன­டை­வர் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

சிறப்­புப் பேருந்­து­களை இயக்­கு­வது தொடர்­பாக நேற்று போக்கு­வ­ரத்­துத் துறை­யின் ஆலோ­சனைக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் ஜன­வரி 12 முதல் 14ஆம் தேதி வரை­யி­லான மூன்று நாள்­களில் சென்­னை­யில் இருந்து நாள்­தோ­றும் இயக்­கப்­படும் 6,300 பேருந்­து­க­ளு­டன் 4,449 சிறப்பு பேருந்­து­கள் என்று மொத்­தம் 10,749 பேருந்­து­கள் இயக்­கப்­பட உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல், பிற ஊர்­களில் இருந்­தும் மூன்று நாள்­களில் சுமார் 6,200 சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­படும் என போக்­கு­வரத்துத்­துறை கூறி­யுள்­ளது.