மலேசியா செல்லவிருந்த விமானம் ரத்து; பயணிகள் கோபம்

மலேசியா செல்லவிருந்த விமானம் ரத்து; பயணிகள் கோபம்

1 mins read

சென்னை: இயந்­திரக் கோளாறு கார­ண­மாக சென்­னை­யில் இருந்து மலே­சியா செல்­ல­வி­ருந்த விமா­னம் ரத்தானது. அதில் பய­ணம் மேற்­கொள்ள இருந்த 159 பய­ணி­கள் தங்குவிடு­தி­களில் தங்க வைக்­கப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் இருந்து சென்னை வந்த விமா­னத்­தில் 194 பய­ணி­கள் இருந்­த­னர். அவர்­கள் தரை­யி­றங்­கி­ய­தும் சென்­னை­யில் இருந்து 159 பய­ணி­கள் அதே விமா­னத்­தில் கோலா­லம்­பூர் செல்ல இருந்தனர்.

அந்த விமா­னம் காலை 10.45 மணிக்கு தரை­யி­றங்­கி­யது. பின்னர் 11.45 மணி­க்குப் புறப்­பட இருந்­தது. அதில் செல்ல இருந்த பய­ணி­கள் அனை­வ­ரும் விமான நிலைய பாது­காப்பு சோதனை, சுங்­கச் சோதனை, குடி­நு­ழைவு சோதனை ஆகி­ய­வற்றை முடித்­துக் கொண்டு விமா­னத்­தில் ஏறு­வ­தற்­கா­கக் காத்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், விமா­னத்­தில் இயந்­தி­ரக் கோளாறு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அதைச் சரி­செய்ய இரண்டு மணி நேர­மா­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

எனி­னும் இயந்­தி­ரக் கோளாறை சரி­செ­ய்ய முடி­ய­வில்லை. இத­னால் பய­ணி­கள் சுமார் ஏழு மணி நேரம் காத்­துக்­கி­டந்­த­னர். அதன் பிற­கும் விமா­னப் புறப்­பாடு குறித்து உறு­தி­யான தக­வல் வெளி­யா­கா­த­தால் கோப­ம­டைந்த பய­ணி­கள் பலர், விமான நிறு­வன ஊழி­யர்­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதையடுத்து பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு அனை வரும் தங்குவிடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.