தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் புதி­தாக 92,721 பேருக்கு காச­நோய் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இது சென்ற ஆண்டை விட 11.5 விழுக்­காடு அதி­கம்.

இந்­தி­யா­வில் காச­நோயை முழு­மை­யாக ஒழிக்க மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றன. எதிர்­வ­ரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் காச நோயை முற்­றி­லும் ஒழிப்­பது இலக்கு.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் முழு­மை­யாக குண­ம­டை­யும் காச நோயா­ளி­க­ளின் விகி­தம் கணி­ச­மாக உயர்ந்­துள்­ளது.

இவர்­களில் 84 விழுக்­காட்­டி­னர் முதல் சிகிச்­சை­யி­லேயே குண­ம­டைந்­த­தா­க­வும் தொடர் சிகிச்­சை­கள் மூலம் எஞ்­சி­ய­வர்­களும் முழு­மை­யாக குண­ம­டைந்­த­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

சிகிச்சை காலத்­தில் நோயா­ளி­க­ளுக்கு ஊட்­டச்­சத்து அளிப்­பதற்­காக நிதி­யு­தவியும் வழங்­கப்­படு­கிறது.

தமிழகத்தில் தற்போது தனி­யார் மருத்­து­வ­மனை­களில் 21,379 பேரும் அரசு மருத்­து­வ­ம­னை­களில் 71,342 பேரும் முதல்­கட்ட சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் மாநி­லத்­தில் 83,145 பேர் காச­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

காச­நோய்க்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­கும் ஒரே மாதி­ரி­யான அறி­கு­றி­கள் இருப்­ப­தால் பரி­சோ­தனை செய்­து­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

பலர் முன்­கூட்­டியே பரி­சோ­தனை செய்­த­தால் காச­நோய் பாதிப்பு அதி­க­மா­கக் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­க­லா­மென கரு­தப்­படு­கிறது.