சென்னை: நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இம்மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வதந்தி பரவத் தொடங்கியது.
இந்நிலையில் அமைச்சர் இதற்கு விளக்கமளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவில், "நான் முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு தற்செயலானது. என் வார்த்தைகளைச் சிலர் தவறுதலாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
"நான் எழுதும் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்ற வகையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்காக மன்னிக்கவும்.
"இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது என்பதால் அவ்வாறு தெரிவித்திருந்தேன். எந்தவோர் அமைச்சரும் என்றாவது ஒருநாள் அலுவலகத்தை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும்," என்று திரு பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

