ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா (படம்) நேற்றுப் பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 46.
தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான திருமகன், தமிழக காங்கிரசின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கட்சியின் தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகத் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.
நேற்றுக் காலை நெஞ்சு வலிக்காகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமகன் ஈவெரா தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 8,523 வாக்குகள் அதிகம் பெற்றார்.

