பதக்கங்களைக் குவித்த பழங்குடியின மாணவர்கள்

1 mins read
8e978a3d-9c40-4ca9-87ea-ad5757c48be2
-

சென்னை: ஆந்­தி­ரப் பிர­தேச மாநி­லம் குண்­டூர், விஜ­ய­வா­டா­ ஆ­கிய நக­ரங்­களில் சென்ற மாதம் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்­றா­வது 3வது தேசிய அள­வி­லான விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

இவற்­றில் 22 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 4,000க்கு மேற்­பட்ட மாணவ, மாண­வி­யர் கலந்து கொண்­ட­னர்.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த 177 பழங்­கு­டி­யின மாணவ, மாண­வி­ய­ரும் இதில் பங்­கு­பெற்­ற­னர்.

போட்­டி­களில் முன்­னெப்­போ­தும் இல்­லாத வகை­யில் 10 தங்­கம், 27 வெள்ளி, 30 வெண்­க­லம் என மொத்­தம் 67 பதக்­கங்­களை வென்று தமிழ்­நாடு ஐந்தாம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்­தது.

பதக்­கங்­கள் வென்ற மாணவ,மாண­வி­கள் முதல்­வர் மு.க. ஸ்டா­லினை நேற்று சந்­தித்து வாழ்த்­துப் பெற்­ற­னர்.

அரி­ய­லூர் மாவட்ட இரு­ளர் இனப் பழங்­குடி மக்­க­ளுக்கு முந்­திரி சேக­ரம் செய்து கொள்­ளும் உரி­மைக்­கான ஆணை­களை வழங்­கும் அடை­யா­ள­மாக 10 பேருக்கு முதல்­வர் ஆணை­களை வழங்­கி­னார்.

இதன்­மூ­லம் 500 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 2,000 இரு­ளர் இன மக்­கள் பல­ன­டைந்­த­னர். தொழி­லா­ளர்­க­ளாக இருந்த இவர்­கள் இப்­போது தொழில்­மு­னை­வர்­க­ளாக மாறி­யுள்­ள­னர்.