போதைப்பொருள் பற்றி புகாரளிக்க பள்ளிகளில் புகார் பெட்டி

1 mins read

குமரி: போதைப்­பொ­ருள் புழக்­கம் தொடர்­பாக இனி பள்ளி மாண­வர்­களும் புகார் அளிக்க ஏது­வாக, பள்­ளி­களில் புகார் பெட்­டி­கள் வைக்­கப்­பட்டுள்ளதாக குமரி காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

குமரி மாவட்­டத்­தில் போதைப் பொருள்­கள் தொடர்­பாக கடும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மைக்­கா­ல­மாக அங்கு மாண­வர்­கள் மத்­தி­யில் கஞ்சா உள்­ளிட்ட போதை­ப்பொ­ருள்­கள் புழக்­கத்­தில் இருப்­ப­தாகத் தக­வல்­கள் வெளி­யா­கின. இதை­ய­டுத்து, தொடக்க நிலை­யி­லேயே உரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து மாண­வர்­களை போதைப் பழக்­கத்­திற்கு ஆட்­ப­டா­மல் தடுக்க வேண்­டும் என்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­காக பள்ளி, கல்­லூ­ரி­கள் அரு­கில் உள்ள கடை­களில் போதைப்­பாக்கு, கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருள்கள் விற்­கப்­ப­டு­கின்­ற­னவா என காவல்­துறை­யி­னர் தீவி­ர­மா­கக் கண்­காணித்து வரு­கின்­ற­னர்.

மேலும், மாண­வர்­கள் மத்­தி­யில் போதைப்­பொ­ருள் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பல்­வேறு நிகழ்ச்­சி­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன.

போதைப்­பொ­ருள்­கள் பயன்­பாடு தொடர்­பாக புகார் அளிக்க அர­சுப் பள்­ளி­களில் புகார் பெட்­டி­கள் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குமரி மாவட்ட காவல் கண்­காணிப்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

"முதற்­கட்­ட­மாக ஐந்து பள்­ளி­களில் புகார் பெட்­டி­கள் வைக்­கப்­பட்­டுள்ளன. இது­கு­றித்து மாண­வர்­க­ளுக்கு உரிய விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. கஞ்சா விற்­பனை செய்­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தோடு வங்கிக் கணக்­கும் முடக்­கப்­ப­டு­கிறது.

"புகார் பெட்­டி­கள் மூலம் மாணவ, மாண­வி­யர் பாலி­யல் அத்­து­மீ­றல்­கள் குறித்­தும் புகார் மனு அளிக்­க­லாம்," என்று கண்­கா­ணிப்­பா­ளர் ஹரி­கி­ரண் பிர­சாத் கூறி­னார்.