தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீதிமன்றம்: 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்காதீர்

1 mins read

மதுரை: தமி­ழ­கத்­தில் 21 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் மது­வுக்கு அடி­மை­யாகி இருப்­பது வருத்­தம் அளிப்­ப­தாக உயர் நீதி­மன்­ற கிளை தெரி­வித்­துள்­ளது.

மது விற்­ப­தை­யும் வாங்­கு­வதை­யும் கட்­டுப்­ப­டுத்தி, மது போதை பழக்­கத்தை குறைக்க வேண்­டி­யது மாநில அர­சின் கடமை என்­றும் நீதி­ப­தி­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

மேலும், 21 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு மது விற்­கக்­கூ­டாது என்­பதை அர­சாங்­கம் தீவிரமாகப் பரி­சீ­லிக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னர்.

திருச்­செந்­தூ­ரைச் சேர்ந்த ராம்­கு­மார் ஆதித்­தன் என்­ப­வர் கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை உயர் நீதி­மன்றக் கிளை­யில் தாக்­கல் செய்த மனு­வில், தமி­ழ­கத்­தில் மது விற்­பனை நேரத்தை மதி­யம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க உத்­த­ர­விட வேண்­டும் எனக் கோரி இருந்­தார்.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­ப­தி­கள், மனு­தா­ர­ரின் கோரிக்கை குறித்து தமி­ழக அரசு பரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்­ற­னர்.

"மாண­வர்­களும் 21 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளும்­கூட மது அருந்­து­வ­தால், மாநி­லத்­தின் சமூக, பொரு­ளா­தா­ரச் சூழல் கணி­ச­மாகப் பாதிக்­கப்­பட்டு, அதன் விளை­வாக, குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. "இளம் தலை­மு­றை­யி­னர் மது அருந்­து­வது அவர்­க­ளுக்­கும் சமூ­கத்­துக்­கும் நாட்­டுக்­கும் நீண்ட காலத்­துக்கு மிகத் தீங்­கா­னது. எனவே மது­வி­னால் ஏற்­படும் அத்­து­மீ­றல்­களை அடை­யா­ளம் கண்டு உட­ன­டி­யாக அழிப்­பது முக்­கி­யம்.

"மது ஒழிப்பை சமூக, பொரு­ளா­தார, பொது சுகா­தார பிரச்­சி­னை­யா­கக் கருத வேண்­டும். இதற்கு அர­சாங்­கத்­தின் முயற்­சி­களும் தேவைப்­ப­டு­கிறது," என நீதி­ப­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.