ஈரோடு: அதிகாலை வேளையில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் காரணமாக ஈரோட்டில் பதற்றம் நிலவுகிறது.
நசியனூர் பகுதியில் அந்த உணவகம் அமைந்துள்ளது.
தொழில் போட்டி காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அண்மைய சில குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, இது பயங்கரவாத செயலாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

