தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயமுறுத்தும் சிகை அலங்காரம்; ஆசிரியர்கள் அதிர்ச்சி, குழப்பம்

1 mins read
8ae5e188-323e-4565-919e-63a78cdd2fff
-

வேலூர்: அர­சாங்கப் பள்­ளி­களில் சில மாண­வர்­கள் பேருந்து படிக்­கட்­டில் பய­ணம் செய்­வது, வகுப்­பறை­யில் நட­னம் ஆடு­வது, ஆசிரி­யர்­களை மிரட்­டு­வது போன்ற ஒழுங்­கீன செயல்­களில் ஈடு­பட்டு வரும் அவ­ல­நிலை நிலவி வருகிறது.

இந்தச் சூழ­லில், மாண­வர்­கள் தலை­மு­டி­யில் கோடு போடு­தல், பாக்ஸ் கட்­டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்ற சிகை அலங்­கா­ரத்துடன் பள்­ளிக்கு வரு­கின்றனர்.

வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, திரு­வண்­ணா­மலை மாவட்­டங்­களில் இது­போன்ற அலங்­கா­ரங்­களைத் தவிர்த்து, பள்ளிச் சூழ­லுக்கு ஏற்ப ­சிகை அலங்­கா­ரம் செய்­யுமாறு மாண வரிடம் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

கண்டபடி மாண­வர்­களுக்கு முடி அலங்­கா­ரம் செய்­யக்­கூடாது என கடைக்காரர்களுக்கு வேலூர் ஆட்­சி­யர் எச்­சரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

அரை­யாண்டு விடு­முறைக்குப் பின் பள்ளி திரும்­பிய மாணவர்­கள் பலர் விதவிதமான சிகை அலங்காரத்துடன் பள்­ளிக்கு வந்­ததைக் கண்டு அரசுப்பள்ளி ஆசி­ரி­யர்­கள் அதிர்ச்சியடைந்­துவிட்டனர்.

அவர்­களைப் பார்த்த அரசுப் பள்ளி ஆசி­ரி­யர்­கள் எப்­படி அவர்­களைக் கண்­டிப்­பது, அறி­வுரை வழங்­கு­வது என்பது தெரியாமல் திகைத்­துப்­போய் நிற்­கின்­ற­னர்.

துணிச்­ச­லான ஆசி­ரி­யர்­கள் சிலர் மாண­வர்­க­ளி­டம் பணம் கொடுத்து முடித்­தி­ருத்தும் கடைக்கு அனுப்பிவைத்து சொந்த செல­வில் முடி வெட்ட வைத்­துள்­ள­னர்.

தனி­யார், அரசு நிதி உதவி பெறும் பள்­ளி­களில் இது­போன்ற ஒழுங்­கீன செயல்­களில் மாண­வர்­கள் ஈடு­ப­டு­வது குறை­வாக உள்­ளது. ஆனால் அரசுப் பள்ளி­களில் 8-12ஆம் வகுப்பு படிக்கும் மாண­வர்­கள் இது­போன்ற செய­லில் ஈடு­படுகிறார்கள்.