ரூ.5 கோடி தப்பியது: கொள்ளைக்கூட்ட தலைவி பிடிபட்டார்

ரூ.5 கோடி தப்பியது: கொள்ளைக்கூட்ட தலைவி பிடிபட்டார்

2 mins read
69622d33-a7b8-4492-b3fe-080f14b160fc
படம்: பிக்ஸாபே -

வேட­சந்­தூர்: திண்­டுக்­கல் வாணி­யம்­பாடி பகு­தி­யில் ரூ. 5 கோடி உண்­டி­யல் பணத்தைக் கொள்ளை ­அடிக்­கச் சென்ற அதி­ப­யங்­கர கொள்­ளைக்­கூட்­டத் தலை­வியை தமி­ழக காவல்­துறை கூண்­டோடு கைது செய்து இருக்­கிறது.

இது பற்றி அதி­கா­ரி­கள் பல்­வேறு விவ­ரங்­க­ளை கூறினர்.

திண்­டுக்­கல் மாவட்­டம் சாலை­யூ­ரைச் சேர்ந்­த­ சீனி­வா­சன், 40, என்ற நிலச்­சொத்து அதி­பர், அனைத்­து­லக மனி­த­ உ­ரி­மை­கள் கழக மதுரை மண்­டல பொதுச் செய­லா­ள­ரான தீன­த­யா­ளன் என்­ப­வ­ரி­டம் ரூ. 4 லட்­சத்தை முன்­ ப­ண­மா­கக் கொடுத்து புதிய இடம் வாங்க ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு கூறி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில், அனைத்­து­லக மனித உரி­மை­கள் கழ­கத்­தின் மதுரை மாவட்ட செய­லா­ள­ராக இருக்­கும் மதுரை உத்­தப்­ப­நா­யக்­க­னூ­ரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்­ம­ணி­யி­டம் சீனி­வா­சன் பற்றி தீன­த­யா­ளன் பல­வற்­றை­யும் தெரி­வித்­தார்.

கொள்­ளைக்­கூட்­டத் தலைவி யான ஜோதி, சென்­னை­யில் காவல்­துறை அதி­கா­ரி­யாக வேலை பார்த்­த­போது பத­வி­யில் இருந்து அகற்றப்பட்ட செல்வக் ­கு­மார் என்ற குற்­ற­வா­ளி­யு­டன் சேர்ந்து, 16 பேர் கும்பலுடன் சீனி­வா­சன் வீட்­டில் புகுந்து 43 பவுன் தங்க நகை­க­ளை­யும் ரூ.18 லட்­சத்­தை­யும் அள்­ளிச் சென்­ற­ார்.

சீனி­வா­சன், அது பற்றி புகார் கொடுத்­தார். இந்த நிலை­யில், வாணி­யம்­பாடி பகு­தி­யில் ரூ. 5 கோடி உண்­டி­யல் பணத்­தைக் கொள்ளை­ய­டிக்க தன் படையுடன் ஜோதி சென்று கொண்­டி­ருந்­த­போது திண்­டுக்­கல், திருச்சி மாவட்ட எல்­லை­யில் காவல்­துறை­யி­டம் வச­மாக சிக்­கினார்.

மொத்­தம் எட்டு பேர் பிடி­பட்டு இருக்­கி­றார்­கள். இதர எட்டு பேர் தேடப்­பட்டு வரு­கி­றார்­கள். பணம், நகை, கார், ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ள­தாக அதி­காரி­கள் கூறி­னர்.