உள்ளே புகுந்து வாக்குச்சீட்டுகள் மாயம்: வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு

உள்ளே புகுந்து வாக்குச்சீட்டுகள் மாயம்: வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு

1 mins read
e5b313d7-6e2d-4813-bd32-63be180f729b
-

சென்னை: சென்னை உயர் நீதி­மன்ற வழக்­க­றி­ஞர்­கள் சங்­கத் தேர்­தல் ஆறு ஆண்­டு­க­ளுக்­குப்­ பி­றகு திங்­கட்­கி­ழமை நடந்­தது.

ஆனால், யாரோ சிலர் வாக்­குச்­சாவடிக்­குள் புகுந்து வாக்­குச்­சீட்­டு­களைக் கைப்­பற்­றி­க்கொண்டனர்.

வாக்­குச்சீட்­டு­கள் மாய­மா­னதை அடுத்து சங்­கத் தேர்­தல் தேதி குறிப்­பிடப்­ப­டா­மல் தள்­ளி­வைக்­கப்­பட்­டது.

பாரம்­ப­ரி­ய­மிக்க சென்னை உயர் நீதி­மன்ற வழக்­க­றி­ஞர்­கள் சங்­கத்­தின் (எம்­எச்­ஏஏ) தலை­வர், துணைத் தலைவர், செய­லா­ளர், பொரு­ளா­ளர், நூல­கர், 11 முது­நிலை, இள­நிலை செயற்­குழு உறுப்­பினர்­களைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்தல் திங்­கட்­கி­ழமை ­காலை சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் நடந்­தது.

வாக்­க­ளிக்க தகு­தி­யான வழக்­கறிஞர்கள், வாக்­குச்­சீட்­டைப் பெறு­வதற்­கான கியூ-ஆர் கோடு அடை­யாள அட்டை கட்­ட­மைப்­புப் பிரச்­சி­னை­யால் சரி­யாக வேலை செய்­ய­வில்லை என்­றும் தேர்­தல் பணி­யில் தனி­யார் கல்­லூரி மாண­வர்­கள் பணி­ய­மர்த்­தப்­பட்­ட­தா­க­வும் குற்­றம் சாட்டினர். வழக்­க­றி­ஞர்­கள் சிலர் மொத்­த­மாக கியூ-ஆர் கோடு அடை­யாள அட்­டை­களை அள்­ளிச்­ சென்­று­விட்­ட­னர்.

இதற்­குள் சிலர் வாக்­குச்­சா­வ­டிக்­குள் நுழைந்து, வாக்­க­ளிக்­கப்­பட்ட வாக்­குச்­சீட்­டைக் கைப்­பற்றி வெளியே எடுத்­துச் சென்­ற­னர்.

அவற்றின் விளைவாக தேர்தலை நடத்த முடியவில்லை. வாக்குச்சீட்டுகள் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.