கண்களில் கறுப்புத் துணி கட்டி 10வது நாளாக தொடர் போராட்டம் 3,949 தாதியா்க்கான பணியிடம் நிரப்பப்படும்

கண்களில் கறுப்புத் துணி கட்டி 10வது நாளாக தொடர் போராட்டம் 3,949 தாதியா்க்கான பணியிடம் நிரப்பப்படும்

2 mins read
f2d26da7-b9f9-4148-9b49-fccf7619501f
-

சென்னை: தமிழ்­நாட்­டின் மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் தாதி­யர்க்­கான 3,949 பணி இடங்­கள் நிரப்­பப்­படும் என்று மக் கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கால­கட்­டத்­தில் பணி­யாற்­றி­ய­வா்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை வழங்க முன்னு ரிமை வழங்­கப்­படும் என்­றும் அவர் கூறினார்.

இது­கு­றித்து சென்­னை­யில் அவா் செய்­தி­யா­ளா்­க­ளி­டம் பேசிய­போது, "கொரோனா காலத்­தில் பணி­யாற்­றிய தாதி யர்க்கு முன்­னு­ரிமை கொடுக்­கும் வகை­யில் 38 மாவட்ட ஆட்சி யா்கள் மூலம் நோ்முகத் தோ்வு நடத்­தப்­பட்டு காலிப் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட உள்­ளன.

"மாவட்ட சுகா­தார மையங்­கள் மூலம் 3,949 தாதி­யர் காலிப் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட உள்­ளன.

"இதற்கு முன்பு மாத ஊதிய மாக ரூ.14,000 வழங்­கப்­பட்ட நிலை­யில், இனி ரூ.18,000 மாத ஊதி­ய­மாக தாதி­யர்க்கு வழங்­கப்­படும். தங்­க­ளது சொந்த மாவட்­டத்­தி­லேயே பணி­யாற்றும் வாய்ப்பை தாதியர் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

"கொரோனா காலத்­துக்கு முன்பே ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணி­யாற்றி வரும் தாதி­ய­ரில் ஏறக்­கு­றைய 500 போ் விரை­வில் பணி நிரந்­த­ரம் செய்­யப்­ப­ட­வுள்­ளனா்," என்றாா் அவா்.

இத­னி­டையே, கொரோனா காலத்­தில் பணி­ய­மர்த்­தப்­பட்ட தாதி­யர்­கள் தங்­க­ளுக்கு நிரந்­த­ரப் பணி வழங்­கக்­கோரி போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

10வது நாளாக நேற்று மதுரை ஆட்­சி­யர் அலு­வ­லக வளா­கம் முன் கண்­களில் கறுப்­புத் துணி கட்டி தாதி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இது­பற்றி அவர்­கள் கூறு­கை­யில், "கிட்­டத்­தட்ட இரண்­டரை ஆண்டுகள் பணியாற்றிய எங் களை அரசு திடீ­ரென வேலை­யில் இருந்து நீக்கியதால், நாங்கள் வாழ்­வா­தா­ரம் இழந்து சிர­மப்­ப­டு­கி­றோம். எனவே, எங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கும்படி போராட்டம் நடத்தி வருகிறோம். வரும் நாட்­களில் எங்­கள் போராட்­டம் மேலும் தீவிரமாகும்," என்­ற­னர்.

அமைச்­ச­ரின் கோரிக்­கையை ஏற்க மறுத்­துள்ள கொரோனா தாதி­கள் சங்­கக் கூட்­ட­மைப்பு செய­லர் ராஜேஷ் கூறுகையில், "தாதியருக்கு மீண்­டும் தற்­கா­லிக ஒப்­பந்தப் பணி தேவை­யில்லை. இப்பணி­யில் தாதியர் சேரமாட்­டார்­கள். எங்­க­ளுக்கு பணிப் பாது­காப்பு, நிரந்­தர பணி­தான் வேண்­டும். எங்­களது கோரிக்­கையை வலி­யு­றுத்தி தலைமைச் செய­ல­கம் நோக்கி இன்று பேரணியாகச் செல்ல உள்­ளோம்," என்று கூறி­னார்.