லண்டனுக்கு விமானத்தில் பறக்கும் கரும்பு, மஞ்சள் கொத்து

லண்டனுக்கு விமானத்தில் பறக்கும் கரும்பு, மஞ்சள் கொத்து

1 mins read

திண்­டுக்­கல்: பொங்­கல் பண்­டிகை வரும் 15ஆம் தேதி கொண்­டா­டப்பட உள்­ளது. இந்­தப் பண்­டி­கையை வெளி­நா­டு­வாழ் தமி­ழர்­களும் ஆர்­வத்­து­டன் கொண்­டாட ஆயத்­த­மாகி வரும் நிலை­யில், திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் இருந்து லண்­ட­னுக்கு கரும்பு, மஞ்­சள் கொத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மூன்று தினங்­க­ளுக்கு முன்பு மதுரை, நிலக்­கோட்டை பகு­தி­யில் இருந்து கோவை அனைத்­து­லக விமான நிலை­யம் வழியாக மஞ்­சள் கொத்து, கரும்­பு­கள் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் ஷார்ஜா நக­ருக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன.

இந்­நி­லை­யில், இப்­போது, திண்­டுக்­கல்­லில் இருந்து திருச்சி அனைத்­து­லக விமான நிலையம் வழியாக கரும்பு, மஞ்­சள் கொத்­து­கள் அட்­டைப்­பெட்­டி­களில் அடைக்­கப்­பட்டு லண்­டன், பாரிஸ், துபாய்க்கு அனுப்பி வைக்­கப்­ப­ட்டு வரு­கிறது.

இது­கு­றித்து கரும்­பு­களை ஏற்­று­மதி செய்­துள்ள விவ­சாயி சின்­ ராஜ் கூறு­கை­யில், "கடந்த ஆண்­டும் வெளி­நா­டு­க­ளுக்கு கரும்பு ஏற்­று­மதி செய்­தேன். இவ்­வாண்­டும் 'ஆர்­டர்'­கள் கிடைத்­த­தால் ஏற்­று­மதி செய்­கி­றேன். கரும்­புத் தோகையை அகற்றி, நீளத்துண்டு ­க­ளாக வெட்டி பெட்­டி­யில் அடைத்து அனுப்­பு­கிறேன்.

"தோகை­யு­டன் கரும்பை வாங்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு தோகை­யுடன் சேர்த்து கரும்பை அனுப்பு­கிறேன். இதனுடன் மஞ்­சள் கொத்­து­க­ளை­யும் அனுப்­பு­கி­றேன். விமா­னத்­தில் கடந்த சில நாட்­க­ளாகத் தின­மும் 500 கிலோ கரும்பை அனுப்பி வரு­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.