திமுகவின் ஆதரவுக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு: ராஜ்பவனுக்கு அதிக பாதுகாப்பு அதிபர் முர்முவைச் சந்தித்து ஆளுநர் மீது திமுக புகார்

திமுகவின் ஆதரவுக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு: ராஜ்பவனுக்கு அதிக பாதுகாப்பு அதிபர் முர்முவைச் சந்தித்து ஆளுநர் மீது திமுக புகார்

2 mins read
0ec4cb00-9574-4635-bb5b-5e73ef5fbcf9
படம்: பிக்ஸாபே -

ெசன்னை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி சட்­ட­ச­பை­யின் மாண்பு களை மீறி­விட்­ட­தா­கக் குற்­றம் சாட்டி உள்ள திமுக, அவரை உட­ன­டி­யா­கத் திரும்­பப் பெறக் கோரி அதி­ப­ரைச் சந்­தித்து வலி யுறுத்த முடிவு செய்­துள்­ளது.

அர­சு­டன் ஆளு­நரின் மோதல் போக்கு தொடர்­ந்து வரு­வ­தால் இடமாற்­றம் செய்ய வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

தமி­ழ­கத்தின் வளர்ச்சி குறித்த புள்­ளி­வி­வ­ரங்­க­ளைக் கூட சட்­டப்­பே­ர­வை­யில் வாசிக் காமல் ஆளு­நர் புறக்­க­ணித்துள்­ளார் என தமி­ழக அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.

இத­னி­டையே, பல்­வேறு அமைப்­பு­கள் சார்­பில் போராட்­டங்­கள் நடத்­தப்­பட உள்ளதாக அறி­விக்­கப்­பட்டுள்ள நிலை­யில், கம்­யூ­னிஸ்டு, விடு­த­லைச் சிறுத்தை உள்­ளிட்ட கட்­சி­கள் ராஜ்­ப­வனை முற்­று­கை­யி­டப் போவ­தாக அறி­வித்­துள்­ளன.

நாளை 13ஆம் தேதி ஆளு­நர் மாளிகை முற்­றுகையிடப்­படும் என்று விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி அறி­வித்துள்­ளது.

இத­னால் கிண்­டி­யில் உள்ள ராஜ்­ப­வ­னுக்கு அதி­க பாதுகாப்பு போடப்பட்டு உள்­ளது.

தமி­ழ­கச் சட்­ட­ச­பை­யில் இந்த ஆண்­டின் முதல் கூட்­டத் தொடர் கடந்த திங்­க­ளன்று ஆளு­நர் உரை­யு­டன் தொடங்­கி­யது.

அரசு தய­ரித்­துக் கொடுத்த உரை­யில் ஒரு­சில பகு­தி­களை ஆளு­நர் படிக்­க­வில்லை.

அவ­ருக்கு எதி­ராக முதல்­வர் ஸ்டா­லின் தீர்­மா­னம் கொண்டு வந்­தார். இத்தீர்­மா­னத்தை முதல்­வர் வாசித்­துக்கொண்­டி­ருக்­கும்­போதே ஆளு­நர் கோபத்துடன் அவையை விட்டு வெளி­யே­றி­னார்.

இதற்குக் கடும் கண்­ட­னம் ெதரி­வித்­துள்ள தலை­வர்­கள், அவரை உட­ன­டி­யாக திரும்­பப் பெறு­மாறு வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

ஆளு­ந­ரைக் கண்­டித்து மாநிலத்தில் கல்­லூரி மாண­வர்­கள் நேற்று முன்­தி­னம் போராட்­டம் நடத்­திய நிலை­யில், திமுக கூட்­ட­ணிக் கட்சி எம்­பிக்­கள் அதி­பர் திரௌ­பதி முர்­மு­வைச் சந்­தித்­துப் பேசுவதற்காக நேற்று டெல்­லியில் காத்திருந்தனர்.

இத­னி­டையே, சட்­ட­சபை மர­பு­களை ஆளு­நர், முதல்­வர் இரு­வ­ருமே மீறி­விட்­ட­னர் என பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் கூறி­யுள்ளார்.

"ஆளு­நர் பிரச்­சிை­னயை விட­வும் தமி­ழ­கத்­தில் இன்­னும் எத்­த­னையோ பிரச்­சி­னை­கள் உள்­ள­ன. விவசாயிகளுக்கான வெள்ள நிவா­ர­ணம், கரும்பு தொடர்பான பிரச்­சினை, நொய்­யல் ஆற்றை மீட்­டெ­டுக்­கும் பிரச்­சி­னை­ என பல பிரச்சினை களுக்குத் தீர்வு காண­வேண்­டிய தேவை உள்­ளது.

"நாட்­டுப் பண் முடி­வ­தற்கு முன்பு ஆளு­நர் வெளி­யே­றி­யது மரபு மீறிய செயல்­தான். அதற்­காக, தொடர்ந்து இது­கு­றித்து விவா­திப்ப­தில் பயன் இல்லை," என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.