சென்னை: நேற்றைய சட்டப் பேர வைக் கூட்டத்தொடரில் பங்கேற் பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்எல்ஏக் களும் கறுப்புச் சட்டை, புடவை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக் கான விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை ஒரு முடிவு எடுக்காமல் உள்ளதால் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு கடிதம் அளித்துள்ளது. ஆனால், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பிலிருந்து நீக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுதொடர்பாக சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

