ெசன்னை: சிவகங்கை மாவட் டம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை அங்கு வசிக்கும் மக்களும் வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவர்களும் சீர்வரிசையாக வழங்கி உள்ளனர்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க தங்களால் இயன்றதை செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே அண்டக்குடி புதூர் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்குத் தேவையான பொருள்களை அங்கு வசிக்கும் கிராம மக்களும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் முன்னாள் மாணவர்களும் சீர்வரிசையாக வழங்கினர்.
பள்ளிக்குத் தேவையான கணினி, டிஜிட்டல் கரும்பலகை, நாற்காலிகள், உபகரணங்கள், எல்இடி தொலைக்காட்சி, மாண வர்களுக்கான பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவற்றை 2 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி பள்ளிக்கு எடுத்து வந்தனர்.
சீர்வரிசை எடுத்து வருவது போல் பொருள்களை மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்.
சீர்வரிசையைக் கொண்டு வந்தவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் முன்னாள் மாணவர் களும் கிராமமக்களும் 'நாளை நமதே' என்ற வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி இப்பொருள்களை வாங்கிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறின.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே திருவெள்ளை வாயல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குத் தேவையான ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை முன்னாள் மாணவர்களும் கிராமத்தினரும் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர்.

