1,000 ஆடுகளை சொகுசு காரில் திருடிய பெண் கைது

1,000 ஆடுகளை சொகுசு காரில் திருடிய பெண் கைது

2 mins read
8740f90e-d98d-4da4-8a9a-1eafd5b5898f
படம்: பிக்ஸாபே -

தாம்­ப­ரம்: சொகுசு காரில் வந்து ஏறக்­கு­றைய 1,000 ஆடு­க­ளைத் தனது கூட்­டா­ளி­க­ளு­டன் திரு­டிய பெண் இப்­போது காவ­லர்­களின் பிடி­யில் சிக்­கி­யுள்­ளார்.

முன்பு திரு­டிய இடத்­தி­லேயே மீண்­டும் அவர் திருட வந்த போது பிடி­பட்­ட­தாக காவ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சென்னை புற­ந­கர்ப் பகுதி யான தாம்­ப­ரம், பல்­லா­வ­ரம், பம்­மல் உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த சில மாதங்­க­ளாக ஆடு கள் தொடர்ந்து திருட்டுப் போவ­தாக அங்­குள்ள காவல் நிலை­யத்­துக்­குப் புகார் வந்­தது.

இதைத்­தொ­டர்ந்து ஆடு­கள் களவு போன பகு­தி­களில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புக் கேம­ராக் காட்­சி­களை காவ­லர்­கள் ஆய்வு செய்­த­போது, சொகுசு காரில் வந்து ஆடு திரு­டிய பெண் உள்­பட மூவர் பிடி­பட்­ட­னர்.

பம்­மல் ஆதாம் நக­ரைச் சேர்ந்­த­வர் சின்­னப்­பொன்­னன். இவ­ரது வீட்­டில் இருந்த 15 ஆடு கள் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு திருட்டுப் போனதை அடுத்து சங்­கர் நகர் காவல்­நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.

இத­னி­டையே, கடந்த வாரம் அதே கும்­பல் மீண்­டும் சின்­னப் பொன்­னன் வீட்­டில் மீத­மி­ருந்த ஆடு­க­ளைத் திருட வந்­த­போது, சத்­தம் கேட்டு சின்­னப்­பொன்­னன் எழுந்து வந்­ததை அடுத்து கும்­பல் காரில் தப்­பி­யது.

இதைத்­தொ­டர்ந்து நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், காரில் வந்து ஆடு திருடிய முடிச்­சூர் சரோ­ஜினி, ஆட்டோ ஓட்­டு­நர் ஜெயக்­கு­மார், பொரிக்­கடை உரி­மை­யா­ளர் பாரூக் ஆகியோ ரைக் கைது செய்­த­னர்.

மூவ­ரும் முத­லில் ஆட்­டோவை வாட­கைக்கு எடுத்து ஆடு­க­ளைத் திருடி விற்று வந்­துள்­ள­னர். லட்­சக்­க­ணக்­கில் பணம் குவிந்­த­தால் பின்­னர் சொகு­சு கார் வாங்கி கைவ­ரிசை காட்டி உள்­ள­னர்.

அவர்­கள் சென்னை புற­நகர்ப் பகு­தி­களில் கடந்த சில மாதங்­களில் மட்­டும் 1000க்கும் மேற்­பட்ட ஆடு­களைத் திருடி இருப்­ப­தாக காவ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.