கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஆளில்லா வானூர்திகள்

கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஆளில்லா வானூர்திகள்

1 mins read
4a2d5f63-4b84-451a-a86f-bc54313a2994
-

சென்னை: கொசு மருந்து தெளிக்­கும் பணிக்­காக ஆளில்லா சிறிய வானூர்­தி­க­ளைப் பயன்­ப­டுத்த சென்னை மாந­க­ராட்சி நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

இதற்­காக ஆறு வானூர்­தி­கள் வாங்­கப்­பட்­டுள்­ள­தாக மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

தற்­போது கொசுக்­களை கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில், 3,312 தற்­கா­லிக, நிரந்­த­ரப் பணி­யா­ளர்­களை ஈடு­ப­டுத்தி உள்­ளது மாந­க­ராட்சி. இதற்­காக 68 வாக­னங்­கள், புகை­ப­ரப்­பும் இயந்­தி­ரங்­கள், கைகளில் எடுத்­துச் செல்­லும் கொசு மருந்து தெளிப்­பான்­கள் பயன்­ப­டுத்­தப்­படு­கின்­றன.

இந்­நி­லை­யில், கொசு ஒழிப்­புப் பணி­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தும் வகை­யில், மழை­நீர் வடி­கால் கால்­வாய்­களில் கொசுப்­புழு நாசினி தெளிப்­ப­தற்­காக ஆறு வானூர்தி இயந்­தி­ரங்­கள் வாங்­கப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் சென்னை மாந­க­ரில் கொசுத் தொல்­லைக்கு விரை­வில் முடிவு கட்­டப்­படும் என மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மிக விரை­வில் மேலும் சில வானூர்­தி­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் கூறி­னர். நேற்று முன்தினம் ஆளில்லா வானூர்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.