ஸ்டாலின்: போதைப்பொருளை ஒழிப்பதே அரசின் லட்சியம்

ஸ்டாலின்: போதைப்பொருளை ஒழிப்பதே அரசின் லட்சியம்

2 mins read

'தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது'

சென்னை: போதைப் பொருள் தடுப்பு நட­வ­டிக்­கையை தமி­ழக அரசு மிகத் தீவி­ர­மாக மேற்­கொண்டு வரு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் போதைப் பொருள்­களை வேரோ­டும் வேரடி மண்­ணோ­டும் ஒழிப்­ப­து­தான் நடப்பு ஆட்­சி­யின் லட்­சி­யம் என்று சட்­டப்­பே­ர­வை­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

மாநி­லத்­தில் கஞ்சா புழக்­கத்தை குறைக்­க­வும் கஞ்சா கடத்­த­லைத் தடுக்­க­வும் தமி­ழக அரசு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை முதல்­வர் பட்­டி­ய­லிட்­டார்.

போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் திமுக ஆட்சி புதிய வர­லாற்­றைப் படைத்­துள்­ளது என்­றும் ஆப­ரே­ஷன் கஞ்சா நட­வ­டிக்­கை­கள் மூலம் நல்ல பலன் கிடைத்­துள்­ளது என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் கூறி­னார்.

"போதைப் பொருள் விவ­கா­ரம் தொடர்­பாக இது­வரை 50,875 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 11.59 லட்­சம் கிலோ போதைப்­பாக்­கு­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. 12,294 வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன.

"உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்தி கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க உத்­த­ர­விட்­டுள்­ளேன். குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்­குப் பிணை வழங்­கு­வ­தற்கு கடும் எதிர்ப்பு, வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கம், சொத்­து­கள் முடக்­கம், உறு­தி­மொழி பத்­தி­ரம் பெறு­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

முன்­ன­தாக பேர­வை­யில் பேசிய எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, சென்­னை­யில் இருந்து ராம­நா­த­பு­ரத்­திற்கு பல சோத­னைச் சாவ­டி­க­ளைக் கடந்து கடத்திச் செல்­லப்­பட்ட போதைப் பொருள்­களை மத்­திய புல­னாய்­வுத் துறை பறி­மு­தல் செய்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

இதற்­குப் பதி­ல­ளித்த முதல்­வர் ஸ்டா­லின், நடப்பு ஆட்­சி­யில் போதைப்­பொ­ருள்­கள் தொடர்­பாக கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தால்­தான் ஊட­கங்­களில் அவை தொடர்­பான செய்­தி­கள் வெளி­வ­ரு­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

தமிழில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணி: மசோதா தாக்கல்

தமி­ழ­கத்­தில் இனி தமி­ழில் தேர்ச்சி பெறா­மல் அர­சுப் பணி­களில் அமர முடி­யாது என்ற நிலை உரு­வாகி உள்­ளது.

இது தொடர்­பான சட்ட மசோதா நேற்று சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

தமி­ழக அர­சுப் பணி­களில் சேர தமிழ் மொழி கட்­டா­யம் என்ற சட்ட மசோ­தாவை அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தாக்­கல் செய்­தார்.

தமி­ழ­கத்­தில் ஆள்­சேர்ப்பு முக­மை­கள் மூலம் நடத்­தப்­படும் அனைத்து நேர­டிப் போட்­டித் தேர்­வு­க­ளி­லும் தமிழ் மொழி கட்­டா­யம் இடம்­பெற வேண்­டும் என கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்­பர் 1ஆம் தேதி தமி­ழக அரசு முறை­யான அர­சாணை பிறப்­பித்­தது.

அதற்கு செயல்­வ­டி­வம் கொடுக்­கும் வித­மாக புதிய சட்ட மசோ­தாவை அமைச்­சர் தாக்­கல் செய்­துள்­ளார்.