மதுரை விமான நிலையத்தில் இனி 24 மணிநேர விமானச் சேவைக்கு அனுமதி

மதுரை விமான நிலையத்தில் இனி 24 மணிநேர விமானச் சேவைக்கு அனுமதி

2 mins read
a9e04024-44f9-4284-906b-ad50fe67aea7
-

சென்னை: மதுரை விமான நிலை­யம் (படம்) இனி 24 மணி நேர­மும் விமானச் சேவை­களை வழங்க மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு அனு­மதி அளித்­துள்­ளது.

இத­னால் தமி­ழ­கத்­தின் தென் மாவட்ட மக்­கள் அதி­கம் பலன் அடை­வர்.

தற்­போது மதுரை விமான நிலை­யத்­தில் இரவு 8.40 மணி வரை மட்­டுமே விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

இலங்கை, துபாய் உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு விமா­னச் சேவை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இரு­பத்து நான்கு மணி நேர சேவையை அளிப்­ப­தற்கு அனு­மதி அளிக்க வேண்­டும் என தென் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த பல்­வேறு தரப்­பி­ன­ரும் கோரிக்கை விடுத்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில் மத்­திய விமா­னப்­போக்­கு­வ­ரத்து அமைச்சு இக்­கோ­ரிக்­கைக்கு செவி­சாய்த்­துள்­ளது. நாடு முழு­வ­தும் மேலும் நான்கு விமான நிலை­யங்­க­ளுக்கு இதே­போன்ற அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. பய­ணி­க­ளின் தேவையை மன­திற்­கொண்டு இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வ­ரும் ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலை­யம் 24 மணி நேர சேவையை வழங்­கும்.

இதற்­கி­டையே, திருச்சி விமான நிலை­யத்தை மேம்­ப­டுத்­தும் பணி வரும் ஜூன் மாதம் முடி­வ­டை­யும் என இந்­திய விமான நிலைய ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அங்கு தற்­போது ரூ.951 கோடி மதிப்­பில் புதிய முனை­யம் அமைக்­கும் பணி நடை­பெற்று வரு­கிறது.

பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தை­ய­டுத்து புதிய முனை­யம் அமைக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதற்­கான பணி­கள் முடி­வ­டைந்த பின்­னர் திருச்சி விமான நிலை­யத்­தில் ஒரே சம­யத்­தில் 2,900 பய­ணி­களைக் கையாள முடி­யும் என்றும் புதிய முனை­யத்­துக்­கான பணி­கள் 85% முடிந்­துள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.