சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மூலம் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
சென்னையில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதேபோல் பொங்கல் முடிவடைந்த பின்னர் பல்வேறு ஊர் களில் இருந்து சென்னைக்கு, 16 முதல் 18ஆம் தேதிவரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தமாக 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் சுமார் 2 லட்சம் பேர் முன்
பதிவு செய்துள்ளனர்.
அரசின் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

