செங்கல்பட்டு: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த இளையர் ஒருவர் சந்தேகப்படும் விதத்தில் உயிரிழந்தது தொடர் பில், ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த கன்னடப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ஸ்ரீ, 17.
தாம்பரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் பேட்டரி ஒன்றைத் திருடியது தொடர்பில் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கடந்த மாதம் கோகுல்ஸ்ரீ அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதியன்று கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டு இளையர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, தன் மகன் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தாய் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா நடத்திய விசாரணை யில், இளையர் கொல்லப்பட்டது தெரியவந்தது. சீர்திருத்தப் பள்ளியில் இருந்த காவலர் ஆனஸ்ட்ராஜ் இளையரைத் தாக்கியபோது, அவரது கையை இளையர் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சரண்ராஜ், விஜயகுமார், வித்யாசாகர், மோகன், சந்திரபாபு ஆகிய காவலர்கள் சேர்ந்து இைளயரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

