தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேவல் சண்டைக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி

1 mins read
00efe547-d5a4-44c6-9d59-fb0cc9f63ccc
-

சென்னை: பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு ஈரோடு மற்­றும் திரு­வள்­ளூர் மாவட்­டங்­களில் சேவல் சண்டை நடத்­து­வ­தற்கு அனு­மதி கோரி இரண்டு வழக்­கு­கள் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

நேற்று இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. சேவல் சண்­டை­யின்போது சூதாட்­டம் நடத்­தப்­ப­ட­மாட்­டாது, சேவல்­கள் துன்­பு­றுத்­தப்­ப­ட­மாட்டா என்று உறுதி அளித்­தால் சேவல் சண்­டைக்கு அனு­மதி கோரிய மனுக்­கள் பரி­சீ­லிக்­கப்­படும் என்று அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து சேவல்­க­ளைத் துன்­பு­றுத்­தக் கூடாது, போட்டி நடை­பெ­றும் இடத்­தில் கால்­நடை மருத்­து­வர் ஒரு­வர் இருக்க வேண்­டும், சூதாட்­டத்­தில் ஈடு­ப­டக்­கூ­டாது, சேவல்­க­ளுக்கு மது கொடுக்­கக் கூடாது, அவற்­றின் கால்­களில் கத்தி கட்­டக்­கூ­டாது, குறிப்­பிட்ட சமு­தா­யத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளைப் பெரு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் எந்த நட­வ­டிக்­கை­யும் இடம்­பெ­றக்­கூ­டாது போன்ற நிபந்­த­னை­க­ளு­டன் சேவல் சண்டை நடத்­து­வ­தற்கு அனு­மதி அளித்து நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர். மீறி­னால் காவல்­துறை சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.