தை மாதம் முதல் நாளான இன்று தமிழ்நாட்டில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து, கோலங்கள் போட்டு, புதிய பொங்கல் பானைகளில் புது அரிசியில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கொவிட்-19 கிருமி பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தமிழ்நாட்டில் பொங்கல் பெரியளவில் கொண்டாப்படவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பொங்கலோடு உற்சாகமும் பொங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

