அங்கே தப்பிய கொலைகாரன் அடுத்த கோயிலில் சிக்கினான்

அங்கே தப்பிய கொலைகாரன் அடுத்த கோயிலில் சிக்கினான்

1 mins read
ccafe055-b9f3-4e05-87a8-7bd634de1250
பூசா­ரி­யைக் கொலை செய்து உடலை எரித்­த­தை­யும் அந்த நபர் ஒப்­புக்­கொண்­டார். இத­னை­ய­டுத்து, அதி­கா­ரி­கள் அவ­ரைக் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர். படம்: பிக்ஸாபே -

திருப்­பூர்: ஒரு கோயி­லில் திரு­டச் சென்ற ஆசாமி, அங்கு தன்­னைத் தடுத்த கோயில் பூசா­ரி­யைக் கொலை செய்து உடலை எரித்­தார். ஆனால் அடுத்த கோயி­லில் அந்த ஆசாமி வச­மாகச் சிக்­கி­னார்.

திருப்­பூர் வெங்­க­மேடு-ஆத்­துப்­பா­ளை­யம் ரோட்­டில் உள்ள கன்­னி­மார் கருப்­ப­ரா­யன் கோயி­லைச் சேர்ந்த பூசாரி சுப்­ர­மணி,72, என்­ப­வ­ரின் உடல் அந்­தக் கோயி­லின் பின்­பு­றத்­தில் கரு­கிக் கிடந்­தது.

அதன் தொடர்­பில் வட­மா­நில தொழி­லா­ளர்­க­ளை­யும் முந்­தைய கோயில் கொள்­ளை­யர்­க­ளை­யும் காவல்­துறை விசா­ரித்து வந்­தது.

இந்­நி­லை­யில், திருப்­பூர் காங்­கேயம் சாலை விஜ­யா­பு­ரம் பகு­தி­யில் உள்ள காட்­டு­ப்பா­ளை­யம் புத்­துக்­கண் நாகாத்­தம்­மன் கோயி­லில் உண்­டி­யல், சுவா­மிக்கு அணி­விக்­கப்­பட்­டி­ருந்த இரண்டு பவுன் தாலிச் சங்­கிலி திருட்­டுப் போனது.

இதன் தொடர்­பில் சந்­தே­கத்­தின்­பே­ரில் சதீஷ்­கு­மார், 30, என்ற நப­ரைப் பிடித்து அதி­கா­ரி­கள் விசா­ரித்­த­னர்.

பூசா­ரி­யைக் கொலை செய்து உடலை எரித்­த­தை­யும் அந்த நபர் ஒப்­புக்­கொண்­டார். இத­னை­ய­டுத்து, அதி­கா­ரி­கள் அவ­ரைக் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.

அந்த நபர், இதர பல குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்டு இருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கப்­ப­டு­கி­ன்றனர்.