அவனியாபுரம்: மதுரை அவனியா புரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றுள்ள விஜய் என்ற மாடுபிடி வீரர், "இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை," என்று அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அவனியா புரத்தில் பொங்கல் தினத்தன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆக அதிகமாக காளைகளை அடக்கி ஏழு லட்சம் மதிப்பிலான காரை மதுரை ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் பரிசாக வென்றார்.
இரண்டாவதாக 17 காளை களைப் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு மோட்டார் சைக்கிளும் மூன்றாவதாக 13 காளைகளைப் பிடித்த பாலாஜி என்பவருக்குப் பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டன.
"கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டாம் பரிசாக மோட்டார் சைக்கிள்களைப் பரிசாகப் பெற்றேன். இப்போது முதல் இடத்தைப் பிடித்ததில் என் கனவு நிறைவேறிவிட்டதால், இனி எனது தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சி அளித்து அவர்களைச் சிறந்த மாடுபிடி வீரர்களாக உருவாக்குவேன். மின்வாரியத்தில் பணியாற்றி வரும் எனக்கு வேலையில் பதவி உயர்வு கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்," என்று கூறினார் விஜய்.
முதலிடம் பிடித்து, கார் பரிசைப் பெற்றுவிட்டேன். என் கனவு நிறைவேறிவிட்டது. இனி போட்டியிட மாட்டேன். என் தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சியளிப்பேன்.
மாடுபிடி வீரர் விஜய்

