மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு மாடுபிடி வீரரைத் தூக்கி வீசிய காளை 860 காளை, 335 வீரர்களுடன் நெறிதுளி கண்ட பாலமேடு ஜல்லிக்கட்டு; திருச்சியிலும் போட்டி

மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழப்பு மாடுபிடி வீரரைத் தூக்கி வீசிய காளை 860 காளை, 335 வீரர்களுடன் நெறிதுளி கண்ட பாலமேடு ஜல்லிக்கட்டு; திருச்சியிலும் போட்டி

2 mins read
08b41956-9c83-4ac5-956c-9439f3d2e590
-

மதுரை: பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு தமிழ்­நாட்­டில் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­கள் களை கட்டி வரும் நிலை­யில், மதுரை பால­மேட்­டில் விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற போட்­டி­யில் மாடு முட்­டி­ய­தில் அர­விந்த் ராஜ் என்ற வீரர் உயி­ரி­ழந்­தார்.

இச்­செய்தி வீர­ரின் உற­வி­னர்­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

பொங்­கல் திரு­நா­ளான நேற்று முன்­தி­னம் அவ­னி­யா­பு­ரத்­தில் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­கள் நடந்து முடிந்த நிலை­யில், மாட்­டுப்­பொங்­கல் நாளான நேற்று மதுரை பால­மேட்­டில் ஜல்­லிக்­கட்டுப் போட்­டி­கள் தொடர்ந்தன.

ஒன்பது சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. 335 வீரர்களில் துணிச்சலாக நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழ ரசன் முதலிடம் பிடித்தார். அவ ருக்கு முதல்வர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது.

19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி இரண்டாவது பரிசையும் 15 காளைகளை அடக்கிய பாலமேடு ராஜா மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.

இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளையும் திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை இரண்டாவது பரிசையும் வென்றன.

பார்­வை­யா­ளர் உயி­ரி­ழப்பு

இத­னி­டையே, திருச்சி மாவட்­டம், சூரி­யூர் ஜல்­லிக்­கட்டு போட்­டியைக் காண வந்த புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த், 25, என்ற பார்­வை­யா­ளரைக் காளை முட்­டி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­தார். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர் சிகிச்சை பலனின்றி உயி­ரி­ழந்­தார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒன்பது காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் (படம்) காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சள் மலை ஆற்று மைதானத் திடலில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பல காளை­கள் களத்­தில் நின்று விளை­யாடி வீரர்­களை மிரட்­டிப் பறக்­க­விட்­டன. ஒன்பது காளைகளைப் பிடித்து மூன்றாம் இடத்திலிருந்த வீரர் அரவிந்த் ராஜ் 10வது காளையைப் பிடிப்பதற்கு ஆயத்தமானபோது, சீறிப்பாய்ந்து வந்த காளை அவரது வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் கீழே சரிந்து விழுந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் மயக்கமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.