ஒன்பது தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த ஸ்டாலின்

ஒன்பது தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த ஸ்டாலின்

1 mins read
b711212a-47b9-4c37-a7aa-6f28650f54a1
-

சென்னை: தமிழ், இலக்­கி­யம், சமூ­கத்­திற்­கா­கப் பெரும் பங்­காற்றி வரு­ப­வர்­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­க­ளுக்கு நேற்று விரு­து­களை வழங்கி முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கௌர­வித்­தார்.

திரு­வள்­ளு­வரை பெரு­மைப்­படுத்­தும் வித­மாக ஆண்­டு­தோ­றும் மாட்­டுப்­பொங்­கல் திரு­நா­ளன்று திரு­வள்­ளு­வர் தின­மும் கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது.

இது­போல், இவ்­வாண்­டும் சென்னை வள்­ளு­வர் கோட்­டத்­தில் தொடங்­கிய விழா­வில், திரு­வள்­ளு­வர் சிலைக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மலர்­தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.

இதைத்­தொ­டர்ந்து, தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு திரு­வள்­ளு­வர், பார­தி­யார், பார­தி­தா­சன் உள்­ளிட்ட ஒன்­பது பெருந்­த­லை­வர்­க­ளின் பெயர்­களில் விரு­து­களை வழங்கி கௌர­வித்­தார்.

தமிழ் வளர்ச்­சித் துறை சார்­பில் 2023ஆம் ஆண்­டிற்­கான திரு­வள்­ளு­வர் விருது இர­ணி­யன் நா.கு.பொன்­னு­சாமி, 2022ஆம் ஆண்­டிற்­கான அண்ணா விருது உப­ய­துல்லா, காம­ரா­சர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன், பார­தி­யார் விருது முனை­வர் ஆ.இரா.வேங்­க­டா­ச­ல­பதி, பார­தி­தா­சன் விருது வாலாஜா வல்­ல­வன், திரு.வி.க. விருது நாமக்­கல் பொ. வேல்­சாமி, கி.ஆ.பெ. விசு­வ­நா­தம் விருது கவி­ஞர் மு.மேத்தா, பெரி­யார் விருது கவி­ஞர் கலி.பூங்­குன்­றன், தேவ­நே­யப் பாவா­ணர் விருது முனை­வர் இரா.மதி­வா­ணன் ஆகி­யோ­ருக்கு ஸ்டா­லின் வழங்­கிச் சிறப்­பித்­தார்.