ராமஜெயம் வழக்கு: 13 பேரிடம் உண்மை அறியும் சோதனை

ராமஜெயம் வழக்கு: 13 பேரிடம் உண்மை அறியும் சோதனை

1 mins read
96cffc14-2374-4661-800d-378fe9d444e1
ராம­ஜெ­யம் கொலை வழக்­குத் தொடர்­பில் சந்­தே­கிக்­கப்­படும் 13 ரவுடிகளிடம் இன்று­மு­தல் 22ஆம் தேதி வரை சென்­னை­யில் உள்ள தட­ய­வி­யல் துறை அலு­வ­ல­கத்­தில் உண்­மை கண்­ட­றி­யும் பரி­சோ­தனை நடத்­தப்­பட உள்­ளது. படம்: பிக்ஸாபே -

திருச்சி: ராம­ஜெ­யம் கொலை வழக்­குத் தொடர்­பில் சந்­தே­கிக்­கப்­படும் 13 ரவுடிகளிடம் இன்று­மு­தல் 22ஆம் தேதி வரை சென்­னை­யில் உள்ள தட­ய­வி­யல் துறை அலு­வ­ல­கத்­தில் உண்­மை கண்­ட­றி­யும் பரி­சோ­தனை நடத்­தப்­பட உள்­ளது.

இது­கு­றித்து சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்­கும் சிறப்­புப் புல­னாய்­வுத் துறை காவ­லர்­கள் அழைப்­பாணை அனுப்பி உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

13 பேருக்­கும் தனித்­த­னி­யாக அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டுள்ள நிலை­யில், பரி­சோ­த­னை­யின் முடி­வில் உண்­மை­யான குற்­ற­வாளி யார் என்­பது குறித்த அறி­வி­யல் ரீதி­யான முடி­வு­கள் வெளிச்­சத்­துக்கு வரும். இந்­தப் பரி­சோ­தனை அறிக்கை இம்­மாத இறு­திக்­குள் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட உள்­ளது என காவ­லர்­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

அமைச்­சர் கே.என்.நேரு­வின் சகோ­த­ர­ரும் தொழில் அதி­ப­ரு­மான ராம­ஜெ­யம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதி­கா­லை­யில் நடைப்­ப­யிற்சி சென்­ற­போது மர்ம நபர்­க­ளால் கடத்தி, கொடூ­ர­மாக கொல்­லப் பட்­டார்.

இந்த வழக்கை 10 ஆண்­டு­க­ளாக பல்­வேறு பிரி­வைச் சார்ந்த காவ­லர்­கள் விசா­ரித்­தும் எந்த முன்­னேற்­ற­மும் ஏற்­ப­டா­த­தால், இவ்­வ­ழக்கை தற்­போது சிறப்­புப் புல­னாய்­வுக் குழு­வி­னர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

இவ்­வ­ழக்கு தொடர்­பில் முக்­கி­ய­ ரவு­டி­கள் 13 பேரி­டம் உண்மை கண்­ட­றி­யும் சோதனை நடத்­திட திருச்சி நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யது.

இதை­ய­டுத்து, சாமி ரவி, திலீப், சிவா ராஜ்­கு­மார், சத்­ய­ராஜ், சுரேந்­தர் மோகன்­ராம், கணே­சன், தினேஷ், கலை­வா­ணன் உள்­ளிட்ட 13 பேரிடம் சோதனை நடத்­தப்­பட உள்­ளது.