சசிகலா: பன்னீர்செல்வம், பழனிசாமியை சந்திப்பேன்

சசிகலா: பன்னீர்செல்வம், பழனிசாமியை சந்திப்பேன்

1 mins read

சென்னை: அதி­மு­க­வில் உள்­கட்­சிப் பூசல் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அனை­வ­ரை­யும் இணைப்பதற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக சசி­கலா தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் உள்­ளிட்ட அதி­மு­க­வி­னரை விரை­வில் தாம் சந்­தித்­துப் பேச இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

அவ்­வாறு சந்­திக்­கச் செல்­லும்­போது நிச்­ச­யம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விவ­ரம் தெரி­விக்­கப்­படும் என்­றார் அவர்.

"தேர்­த­லுக்கு முன்­னர் அதி­மு­க­வி­னர் அனை­வ­ரும் இணை­வோம். திமு­க­வைத் தோற்­க­டிக்க வேண்­டும் என்­றால் அனை­வ­ரும் இணைய வேண்­டும். அது நிச்­ச­யம் நடக்­கும்," என்­றார் சசி­கலா.

தமி­ழக அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடையே நில­வும் மறை­முக மோதல் குறித்து செய்­தி­யா­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு, ஆளு­நர் விவ­கா­ரத்­தில் என்ன நடந்­தது என்­பது தெரி­யா­த­போது அது குறித்து கருத்து சொல்­வது சரி­யாக இருக்­காது என்­றார் சசி­கலா.