மூன்று மடங்கு இழப்பீட்டை ஏற்க மறுக்கும் பரந்தூர் மக்கள்

மூன்று மடங்கு இழப்பீட்டை ஏற்க மறுக்கும் பரந்தூர் மக்கள்

1 mins read

சென்னை: பந்­தூ­ரில் அமைய உள்ள புதிய விமான நிலை யத்­துக்­காக கைய­கப்­ப­டுத்­தும் நிலங்­க­ளுக்கு மூன்று மடங்கு இழப்­பீடு வழங்க தமி­ழக அரசு முன்­வந்­துள்ள போதி­லும், போராட்­டக்­கா­ரர்­கள் அதை ஏற்­க­வில்லை என ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

கடந்த ஆறு மாதங்­க­ளாக அப்­ப­கு­தி­யில் வசிக்­கும் மக்­கள் பல்­வேறு போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

புதிய விமான நிலை­யத்­துக்­காக பரந்­தூ­ரில் உள்ள 12 கிரா­மங்­களில் இருந்து ஏறத்­தாழ 4,500 ஏக்­கர் நிலங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. மேலும், ஏரி­கள், குட்­டை­கள் உள்­ளிட்ட பல நீர்­நி­லை­கள் அழிக்­கப்­படும் என அப்­ப­குதி மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

மேலும், தங்­க­ளுக்கு அளிக்­கப்­படும் மும்­ம­டங்கு இழப்­பீட்­டைக் கொண்டு, மூன்று மடங்கு நிலங்­களை வாங்­கித் தர இய­லுமா என அர­சுத்­த­ரப்­புக்கு கேள்­வி­யும் விடுத்­துள்­ள­னர்.

"இங்கு விவ­சா­யத்­தை­யும் கால்­நடை வளர்ப்­பை­யும் நம்­பியே மக்­கள் வாழ்­கின்­ற­னர். எனவே இறு­தி­வரை போரா­டு­வோம்," என போராட்­டக்­கா­ரர்­கள் கூறு­கின்­ற­னர்.