சமய நிலையங்களில் அடையாளம் தெரியாத பொருள்

சமய நிலையங்களில் அடையாளம் தெரியாத பொருள்

1 mins read

வாட்­டர்லூ சாலை­யில் உள்ள கத்­தோ­லிக்க சமய நிலைய கட்­ட­டத்­தைச் சுற்றி வெள்ளை நிறத்­தில் அடை­யா­ளம் தெரி­யாத பொருள் தூவப்­பட்­டி­ருந்­தது நேற்று காணப்­பட்­டது.

இதே­போல் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ஆர்­மி­னி­யன் சாலை­யில் உள்ள பைபிள் ஹவுஸ் என்ற கட்­ட­டத்­தில் வெள்ளை நிறப் பொருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அங்கு குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் காவல்­து­றை­யும் அழைக்­கப்­பட்­டது.

நேற்­றைய சம்­ப­வத்­தில் கத்­தோ­லிக்க சமய நிலை­யத்­தில் காலை 10.45 மணிக்கு குறைந்­தது நான்கு குடி­மைத் தற்­காப்­புப் படை வாக­னங்­கள் இருந்­த­தாக செய்­தித் தக­வல்­கள் கூறின.

இதன்­தொ­டர்­பில். கத்­தோ­லிக்க சமய நிலைய ஊழி­யர் ஒரு­வர் தான் காலை 9.00 மணிக்கு வேலைக்கு வந்­த­போது கட்­ட­டத்­தின் கீழ்த்­த­ளத்­தில் வெள்ளை நிறப் பொருள் இருந்­த­தாக பெயர் குறிப்­பிட விரும்­பாத ஊழி­யர் ஒரு­வர் கூறினார். பின்னர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் விசா­ரித்­த­தில் எவ­ருக்­கும் உடல்­நல பாதிப்பு இல்லை எனத் தெரி­ய­வந்­த­தாக அவர் விளக்­கி­னார்.

செவ்­வாய்­கி­ழமை அன்று காலை 11.40 மணி­ய­ள­வில், "ஆர்­மி­னி­யன் சாலை­யில் உள்ள ஒரு இடத்­தில் வெள்­ளைப் பொருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது," என்று ஒரு புகார் பதி­வா­கி­ய­தாக காவல் துறை­ செவ்­வா­யன்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரிவித்தது.

அது பொரு­ளின் மாதி­ரியை எடுத்­தது மற்­றும் சோத­னை­களில் தீங்கு விளை­விக்­கும் பொருட்­கள் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. சம்­ப­வம் குறித்து காவல் துறை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.