கரூர்: ஜல்லிக்கட்டின்போது காளை மாடு முட்டியதில் பார்வையை இழந்த இளையர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது காயமடைந்த 23 வயதான சிவக்குமார் என்ற அந்த இளையர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

