'பிஎஃப்ஐ' நிர்வாகிகளிடம் மூன்றாவது நாளாக விசாரணை

'பிஎஃப்ஐ' நிர்வாகிகளிடம் மூன்றாவது நாளாக விசாரணை

2 mins read

சென்னை: அண்­மை­யில் கோவை­யி­லும் கர்­நா­ட­கா­வி­லும் நிகழ்ந்த குண்டு வெடிப்­புச் சம்­ப­வங்­கள் குறித்து தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் பழனி பகு­தி­யில் முகா­மிட்டு தீவிர விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

மத்­திய அர­சால் தடை செய்­யப்­பட்­டுள்ள 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' அமைப்­பைச் சேர்ந்த நிர்­வா­கி­க­ளி­டம் அதி­காரி­கள் கிடுக்­கிப்­பிடி விசா­ரணை நடத்­தி­ய­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

பிஎ­ஃப்ஐ அமைப்பில் இருந்து மேலும் இரு­வரை விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பழனி புற­ந­கர்ப் பகு­தி­யில் தேநீர்க் கடை நடத்தி வரும் ஐம்­பது வய­தான முக­மது கைசர் பிஎஃப்ஐ அமைப்­பில் மதுரை மண்­ட­லத் தலை­வ­ராக இருந்து வந்­தார்.

அண்­மை­யில் கோவை­யில் கார் ஒன்­றில் எரி­வாயு உருளை வெடித்­துச் சித­றி­யது தொடர்­பில் இவ­ருக்கு முக்­கி­யத் தக­வல்­கள் தெரிந்­தி­ருக்க வாய்ப்­புள்­ள­தாக புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் கரு­து­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து டெல்­லி­யில் இருந்து வந்த ஐந்து பேர் கொண்ட அதி­கா­ரி­கள் குழு கடந்த இரு நாள்­க­ளாக முக­மது கைச­ரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

பள்­ளி­வா­சல் உட்­பட பல இடங்­க­ளுக்கு அவரை நேரில் அழைத்­துச் சென்று கேள்­வி­கள் கேட்ட அதி­கா­ரி­கள், முக­மது கைசர் அளித்த பதில்­க­ளைப் பதிவு செய்­து­கொண்­ட­னர்.

நேற்று மூன்­றா­வது நாளாக அவ­ரி­டம் விசா­ரணை நடை­பெற்­றது.

நேற்று மேலும் இரு பிஎ­ஃப்ஐ நிர்­வா­கி­களை நேரில் வர­வ­ழைத்து புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர்.

இந்த விசா­ர­ணை­யின்­போது பல்­வேறு முக்­கி­யத் தக­வல்­கள் கிடைத்­துள்­ளது என்­றும் அடுத்­தக்­கட்ட விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.