தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக மொழிகளில் தமிழ் நூல்களை மொழிபெயர்க்க ரூ.3 கோடி மானியம்

2 mins read
9958f1c7-41ad-4d9b-9065-7be0da92d47a
-

சென்னை: தமிழ் மொழி­யி­லான சிறந்த படைப்­பு­கள், உலக மக்­கள் அனை­வ­ரும் அறிந்­து­கொள்­ளும் வகை­யில் மற்ற மொழி­க­ளி­லும் மொழி பெயர்க்­கப்­பட உள்­ளது.

இந்­தப் பணிக்­காக மூன்று கோடி ரூபாய் மானி­ய­மாக (Translation grant) வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

சென்னை நந்­த­னத்­தில் பள்­ளிக் கல்­வித்­துறை சார்­பில் மூன்று நாள்­கள் நடை­பெற்ற அனைத்­து­ல­கப் புத்­த­கக் கண்­காட்­சி­யில், 30 நாடு­க­ளைச் சேர்ந்த பதிப்­பா­ளர்­களும் எழுத்தா ளர்­களும் தமி­ழில் மொழி­மாற்­றம் செய்­யும் வகை­யி­லான புத்தகங்­களைக் காட்­சிப்­ப­டுத்தி இருந்­த­னர்.

அனைத்­து­ல­கப் புத்­த­கக் கண்­காட்­சி­யின் நிறைவு விழா­வில் புத்­தக அரங்­கு­க­ளைப் பார்வை யிட்டு ஸ்டா­லின் பேசி­னார்.

"தமிழ் நூல்­களை ஆங்­கி­லம், மலை­யா­ளம், தெலுங்கு, கன்­ன­டம் ஆகிய மொழி­க­ளி­லும் வெளி­யிட்டு உள்­ளோம். பல்­வேறு மொழி­க­ளி­லும் உள்ள நூல்­களைத் தமி­ழில் கொண்­டு­வ­ர­வும் திட்டமிட்­டுள்­ளோம்.

"இந்­தப் பணி­கள் கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக வேக­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

"எப்­போது தர­மான நூல்­கள் மொழி பெயர்க்­கப்­ப­டு­கி­றதோ அப்­போது நமது மொழி­யும் வளம் பெறும். சொற்­களும் வலிமை பெறும்.

"புதிய இலக்­கி­யங்­கள் மட்­டு­மன்றி, புதிய சிந்­த­னை­களும் புதிய சொற்­களும் கிடைக்­கும்.

"காலம்­தோ­றும் புதிய புதிய சொற்­கள் உரு­வா­னால்­தான் தமிழ் மொழி­யின் கால­மும் நீடிக்­கும்.

"தமிழ் மொழியை உல­கெங்­கும் எடுத்­துச்­செல்­லும் வகை­யில், தமிழ் மொழி­யின் சிறந்த படைப்­பு­களை உலக மொழி­க­ளி­லும் இந்­திய மொழி­க­ளி­லும் மொழி­யாக்­கம் செய்­யும் வகை­யில் தமி­ழக அர­சால் மொழி­பெ­யர்ப்பு மானி­ய­மாக மூன்று கோடி ரூபாய் வழங்­கப்­படும்," என்று கூறினார்.

தமிழ் மொழி­யில் இ­ருந்து பிற இந்­திய, உலக மொழி­க­ளி­லும் பிற மொழி­களில் இருந்து தமி­ழி லும் மொழி­பெ­யர்க்­கும் வகை­யில் பல்­வேறு பதிப்­ப­கங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாகி உள்ள தாகவும் முதல்­வர் ஸ்டாலின் தெரிவித்தார்.