தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி

1 mins read
a4887632-0062-4d7d-82df-a964cc22f2e8
விரு­து­ந­கர் மாவட்­டம், சாத்­தூர் அருகே உள்ள கணஞ்­சம்­பட்­டி­யில் உள்ள தனி­யார் பட்­டாசு ஆலை­யில் ஏற்­பட்ட வெடி விபத்­தில் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். அங்கு பணி­யாற்­றிய ஆறு ஊழி­யர்­கள் படு­கா­யம் அடைந்­த­னர். படம்: பிக்ஸாபே -

விரு­து­ந­கர்: விரு­து­ந­கர் மாவட்­டம், சாத்­தூர் அருகே உள்ள கணஞ்­சம்­பட்­டி­யில் உள்ள தனி­யார் பட்­டாசு ஆலை­யில் ஏற்­பட்ட வெடி விபத்­தில் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். அங்கு பணி­யாற்­றிய ஆறு ஊழி­யர்­கள் படு­கா­யம் அடைந்­த­னர். அவர்­களில் மாரீஸ்­வ­ரன், கருப்பசாமி, மாரி­முத்து, ராஜ்­கு­மார் ஆகி­யோ­ருக்கு 100 விழுக்­காடு தீக்­கா­யம் ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­படுகிறது.

மற்­றொரு சம்­ப­வம், சிவ காசி அருகே செங்­க­ம­லப்­பட்டி கிரா­மத்­தில் நடந்­துள்­ளது. இங்­குள்ள தனி­யார் பட்­டாசு ஆலை­யில் ஏற்­பட்ட விபத்­தில் ரவி என்­ப­வர் உயி­ரி­ழந்­தார். விபத்­தில் சிக்­கிய சேமுவல் ஜெய­ராஜ் என்­ப­வரை மீட்ட தீய­ணைப்­புப் படை வீரர்­கள் அவரை சிவ­காசி அரசு மருத்துவ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.