கைப்பேசி கோபுரத்தில் நின்று போராட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 250 பேர் கைது 3,800 ஏக்கர் நிலம் வழங்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கைப்பேசி கோபுரத்தில் நின்று போராட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 250 பேர் கைது 3,800 ஏக்கர் நிலம் வழங்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

2 mins read
ff8f126b-00d8-44c7-bd9c-871fb652c002
-
multi-img1 of 2

ஓசூர்: ஓசூர் அருகே தொழிற்­பேட்டை அமைப்­ப­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து போராட்­டம் நடத்­திய 250 விவ­சா­யி­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களில் சிலர் அங்­கி­ருந்த கைப்­பேசி கோபு­ரங்­களில் ஏறி போராட்­டத்­தில் ஈடு­பட்­டனா்.

போராட்டக்காரர்க­ளுக்கு ஆத­ர­வாக மறி­ய­லில் ஈடு­பட்ட கிருஷ்­ண­கிரி தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­லக்­குமா ரும் காங்­கி­ரஸ் கட்சி நிர்வாகி­களும் கைது செய்­யப்­பட்டனர்.

அவர்கள், தனி­யார் மண்­ட­பத்­தில் தங்க வைக்­கப்­பட்­டு பின்னர் விடுவிக்கப்பட்ட­னர்.

மறி­யல் கார­ண­மாக ஓசூர்- தர்­ம­புரி சாலை­யில் நேற்று போக்கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது.

ஓசூரை அடுத்த உத்­த­னப்­பள்ளி, நாக­மங்­க­லம், அயர்­னப்­பள்ளி ஆகிய பகு­தி­களில் ஐந்­தா­வது தொழிற்­பேட்டை அமைப் பதற்­காக 3,800 ஏக்கா் விளை­நி­லங்­க­ளைக் கைய­கப்­படுத்­தும் பணி நடை­பெற்று வரு­கிறது.

இதற்கு எதிா்ப்­புத் தெரி­வித்து அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­கள் ஓசூர் சாலை­யில் மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

அதேபோல், கைப்­பேசி கோபு­ரங்­க­ளில் ஏறி நின்று போராட்­டம் நடத்தியவர்களும் கீழே இறங்கி வர மறுத்­து­விட்­டனா்.

இதையடுத்து, போராட்­டக்­கா­ரர்­க­ளு­டன் அதி­கா­ரி­கள் நடத்­திய பேச்­சு­வார்த்தை பய­னின்றிப் போன­தால், செல்­லக்­கு­மார் உள்­ளிட்ட அனைவரும் கைது செய் யப்பட்­ட­னர்.

இதுகுறித்து, செய்தியாளர் களிடம் பேசிய செல்­லக்­கு­மார் கூறுகையில், ``விளை­நி­லங்­களைக் கைய­கப்­படுத்­தும் முடிவை அரசு உட­ன­டி­யாக கைவிட வேண்­டும். இந்­தியா முழு­வதும் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்­காக நிலம் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­காக சட்­டம் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கிறது. இதில், விவ­சாய நிலங்­களை விவ­சா­யி­களின் அனு­ம­தி­யின்றி கைய­கப்­படுத்­தக்­கூடாது என்றும் நிலம் கையகப்படுத்தும் பகு­திகளில் 80 விழுக்காடு விவ­சா­யி­க­ளி­டம் ஒப்­பு­தல் பெற்­றால் மட்­டுமே நிலத்தைப் பெற வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது," என்று கூறினார்.