தமிழ் மகன் உசேன்: சசிகலா சந்திப்பு நிகழாது

தமிழ் மகன் உசேன்: சசிகலா சந்திப்பு நிகழாது

1 mins read
2d443b8a-418b-4628-86d5-269c70ed8e9a
"சசி­கலா அ.தி.மு.க. தலை­மையைச் சந்­திக்க உள்­ள­தா­கக் கூறு­வது பெரும் கேலிக்­கூத்­தாக உள்­ளது." படம்: பிக்ஸாபே -

சென்னை: சசி­கலா அதி­முக தலை­மை­யைச் சந்­திக்க உள்­ள­தாகக் கூறுவது கேலிக்கூத்­தா­க உள்ளது. நிச்­ச­ய­மாக அது நடை­பெ­று­வ­தற்கு எந்த வாய்ப்­பு­ம் இல்லை என அதி­முக அவைத் தலை­வர் தமிழ்­ம­கன் உசேன் கூறி­யுள்­ளார்.

திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­ய­போது, "எம்ஜிஆர், ஜெய­ ல­லிதா போன்று இடைக்­காலப் பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழனி­சாமி நான்­கறை ஆண்­டு­கள் சிறப்­பாக ஆட்சி நடத்­தி­னார். சசி­கலா அ.தி.மு.க. தலை­மை யைச் சந்­திக்க உள்­ள­தா­கக் கூறு­வது பெரும் கேலிக்­கூத்­தாக உள்­ளது. நிச்­ச­ய­மாக அது நடை­பெ­று­வ­தற்கு எந்த வாய்ப்­பு­ம் இல்லை. அத்துடன், தலை­மைக் கழ­கத்தைச் சூறை­யா­டி­வர்­களை மீண்­டும் இந்­தக் கட்­சி­யில் சேர்த்துக்கொள்வதற்கு கட்சித் தொண்­டர்­கள் விரும்ப­மாட்­டார்­கள் என்­பது என் கருத்து," என அவர் தெரிவித்துள்ளார்.