அமலுக்கு வந்தன நடத்தை விதிகள்

அமலுக்கு வந்தன நடத்தை விதிகள்

1 mins read
c0016fb8-7527-4bf0-980f-c34714ef194d
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்­பே­ர­வைத் தொகு­திக்கு அடுத்த பிப்­ர­வரி மாதம் 27ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடை­பெற உள்ளதால், ­பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. படம்: பிக்ஸாபே -

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்­பே­ர­வைத் தொகு­திக்கு அடுத்த பிப்­ர­வரி மாதம் 27ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடை­பெற உள்ளதால், ­பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான சிவகுமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திரு­ம­கன் ஈவெரா மறைவை அடுத்து இந்தத் தொகுதி காலியானதால், அடுத்த மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவ தாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், நடத்தை விதிகள் உடடினயாக அமலுக்கு வந்துள்ளன.