தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஆகம விதிகளுடன் தமிழில் பழனி கோயில் குடமுழுக்கு'

1 mins read
65af6fa3-0097-4351-ac39-ad0c8ab47964
கும்­பாபிஷேகம் இம்­மா­தம் 27ஆம் தேதி நடை­பெற உள்­ளது (படம்: இணையம்) -

பழனி: பழனி தண்­டா­யு­த­பாணி சுவாமி கோயி­லின் குடமுழுக்கு தமி­ழில் ஆகம விதிப்­படி நடைபெறும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இம்­மா­தம் 27ஆம் தேதி கும்­பாபிஷேகம் நடை­பெற உள்­ளது.

இந்த நிலை­யில் நேற்று திருப் பணி­கள் தொடர்­பாக அறநிலை­யத்­துறை அமைச்­சர் சேகர் பாபு ஆய்வு மேற்­கொண்­டார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர், குடமுழுக்கு வேள்வி நடை­பெ­றும் இடத்­தில் 90 யாக­ குண்­டங்­கள் அமைக்­கப் பட்­டுள்­ளன. விழா­வில் பங்­கேற்க இணை­ய­த­ளத்­தில் பதிவு செய்ய பக்­தர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்பட்­டி­ருந்­தது என்­றார்.

கடந்த இரண்டு நாட்­க­ளாக 47,000 பக்­தர்­கள் இணை­யம் வழி­யாக பதிவு செய்­துள்­ள­னர்.

ஆனால் இவர்­களில் 2,000 பக்­தர்­கள் குலுக்­கல் முறை­யில் தேர்வு செய்­யப்­பட்டு விழா­வில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­ட­வி­ருக் கின்­ற­னர்.

இதற்­கி­டையே பக்­தர்­கள் மட்டு மின்றி முக்­கிய பிர­மு­கர்­கள், நீதி யர­சர்­கள் ஆகி­யோ­ருக்கு தேவை யான வச­தி­களும் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. வாக­னங்­கள் நிறுத்­து­மி­டம், தற்­கா­லிக மருத்­து­வ­மனை, குடி­நீர், கழிப்­பிட வச­தி­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.