அமாவாசை: ராமேசுவரத்தில் கடலில் புனித நீராடிய மக்கள்

அமாவாசை: ராமேசுவரத்தில் கடலில் புனித நீராடிய மக்கள்

1 mins read
22312ca4-717e-470a-b276-5efb7eb655c4
-

ராமேஸ்­வ­ரம்: தை அமா­வா­சையை முன்­னிட்டு ஆயி­ரக்­ கணக்­கான பக்­தர்­கள் ராமேசு­ வ­ரம் அக்னி தீர்த்தக் கட­லில் புனித நீராட குவிந்­த­னர்.

இந்­திய புனிதத் தலங்­களில் ஒன்­றாகக் கரு­தப்­படும் ராமேசு வ­ரம் ராம­நா­த­சாமி கோவி­லுக்கு ஆடி, தை அமா­வாசை புரட்­டாசி மாதம் மகா­ளய அமா­வாசை நாட்­களில் அக்னி தீர்த்தக் கட­லில் புனித நீராடி சாமியைத் தரி­ச­னம் செய்ய ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் வரு­வது வழக்­கம்.

இந்த நிலை­யில் தை அமா­வா­சையை முன்­னிட்டு ராமேசு­வ­ரம் அக்னி தீர்த்தக் கட­லில் புனித நீராட நேற்று முன்­தி­னம் அதி­காலை முதலே ஏரா­ள­மான பக்­தர்­கள் குவிந்­த­னர்.

பக்­தர்­கள் கட­லில் புனித நீராடி விட்டு பின்­னர் கடற்­க­ரை­யில் அமர்ந்து இறந்­து­போன தங்­க­ளது முன்­னோர்­க­ளுக்குத் திதி தர்ப்­பண பூசை செய்து வழி­பட்­ட­னர். கங்கை ஆற்றிலும் மக்கள் நீராடி, முன்னோர்களுக்குப் பூசை செய்தனர்.