பிரதமர் மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும்: எல். முருகன்

பிரதமர் மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும்: எல். முருகன்

2 mins read

திருச்சி: பிர­த­மர் மோடி உறு­தி­அளித்­த­படி பத்து லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை வழங்­கு­வோம் என்று மத்­திய இணை அமைச்­சர் எல். முரு­கன் கூறி­யுள்­ளார்.

இந்­தி­யா­வின் படித்த இளை­ஞர்­க­ளுக்கு 18 மாதங்­களில் 10 லட்­சம் பேருக்கு மத்­திய அரசு வேலை வழங்­கும் 'ரோஸ்­கர் மேளா' திட்­டத்தை கடந்த அக்­டோ­பர் மாதம் பிர­த­மர் நரேந்­திர மோடி கொண்டு வந்­தார்.

அதன் ஒரு பகு­தி­யாக மூன்­றாம் கட்­டத்­தில் 71,000 இளை­ஞர்­க­ளுக்குப் பணி நிய­மன ஆணை வழங்­கும் விழா அண்­மை­யில் டெல்­லி­யில் நடை­பெற்­றது.

இதில் பிர­த­மர் நரேந்­திர மோடி காணொளிக் காட்சி மூலம் பங்­கேற்று பணி ஆணை­களை வழங்­கி­னார்.

இதன் தொடர்ச்­சி­யாக திருச்சி மத்­திய பேருந்து நிலை­யம் அரு­கா­மை­யில் நடை­பெற்ற பணி நிய­மன ஆணை வழங்­கும் விழா­வில் மத்­திய இணை அமைச்­சர் எல்.முரு­கன் பங்­கேற்று ரயில்வே, சுங்­கத்­துறை, கலால் துறை, விமா­னத்­துறை உள்­ளிட்ட மத்­திய அரசு துறை­யைச் சேர்ந்த 129 பேருக்குப் பணி நிய­மன ஆணை­களை வழங்­கி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய எல். முரு­கன், இந்­தியா முழு­வ­தும் ஒன்­றரை ஆண்­டு­களில் 10 லட்­சம் பேருக்கு மத்­திய அரசு வேலை வழங்­கப்­படும் என பிர­த­மர் மோடி உறுதி அளித்­தார்.

அதன்­படி கடந்த அக்­டோ­பர் 22ஆம் தேதி 75,000 பேருக்­கும், அதன் பின்­னர் நவம்­பர் 22ஆம் தேதி 71,000 பேருக்­கும் பிர­த­மர் பணி நிய­மன ஆணை­களை வழங்­கி­னார் என்­றார்.

"மூன்­றா­வது கட்­ட­மாக நாடு முழு­வ­தும் 71,000 பேருக்கு பிர­த­மர் பணி நிய­மன ஆணை­களை பிரதமர் வழங்­கி­யுள்­ளார்.

"இதே­போன்று கடந்த டிசம்­பர் மாதம் புதி­தாகப் பணி­யில் சேரும் ஒன்­றரை லட்­சம் பேருக்குத் திறன் பயிற்சி அளிக்­கும் முகா­மை­யும் பிர­த­மர் தொடங்கி வைத்­தார். பிர­த­மர் உறு­தி­ய­ளித்­த­படி பத்து லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வழங்­கு­வோம்," என்று அமைச்­சர் சொன்­னார்.