சென்னை: 'ஜி20' மாநாட்டை யொட்டி வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் மாமல்லபுரத்துக்கு வரு கின்றனர்.
அவர்களை முறைப்படி வரவேற்று சிறப்பிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
உலகத் தலைவர்கள் பங்கேற்கும் 'ஜி20' மாநாட்டுக்கு இம்முறை இந்தியா தலைமையேற்கிறது.
இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இம்ாதம் 31ஆம் தேதி, அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ஆம் தேதி, 2ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல் மற்றும் கன்னிமாரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐடிசி சோழா ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
ஜி20 மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உட்பட இருபது நாடு களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மாமல்ல புரத்தில் உள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட உள்ளனர்.
அவர்களுக்கு தமிழக பாரம் பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது மற்றும் கலை நிகழ்ச்சி களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையொட்டி மாமல்லபுரத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அப்போது, வெளிநாட்டினரை வரவேற்க எந்தெந்த இடத்தில் கலைநிகழ்ச்சி நடத்துவது மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து அவர் ஆராய்ந்து ஆேலாசனைகளை வழங்கினார்.

