'காங்கிரஸ் வெற்றி பெறும்'

'காங்கிரஸ் வெற்றி பெறும்'

3 mins read

சென்னை: ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யில் காங்­கி­ரஸ் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டும் அக்­கட்­சி­யைச் சேர்ந்த மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன், நேற்று காலை காலை அண்ணா அறி­வா­ல­யம் சென்று தி.மு.க. தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டா­லினை சந்­தித்து பேசி­னார்.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர் களி­டம் பேசிய முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரான இளங்­கோ­வன், இடைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்சி நிச்­ச­யம் வெற்றி பெறும் என்று கூறி­னார்.

ஈரோடு கிழக்­குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திரு­ம­கன் ஈவெரா திடீ­ரென கால­மா­னார். அவ­ரது மறை­வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்­குத் தொகு­திக்கு இடைத்­தேர்­தல் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வரும் பிப்­ர­வரி 27ஆம் தேதி நடை­பெ­றும் ஈரோடு தொகுதி இடைத்­தேர்­த­லில் திரு­ம­கன் ஈவெ­ரா­வின் தந்­தை­யும் மூத்த காங்­கி­ரஸ் தலை­வ­ரு­மான முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன் போட்­டி­யி­டு­வார் என காங்­கி­ரஸ் மேலி­டம் அறி­வித்­தது.

முன்­ன­தாக தாம் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வில்லை என்­றும் இளைய மகன் சஞ்­சய் சம்­பத் போட்­டி­யிட வாய்ப்பு கேட்டு உள்­ளேன் என்­றும் இளங்­கோ­வன் கூறி­யி­ருந்­தார்.

ஆனால் காங்­கி­ரஸ் மேலி­ட­மும் தமிழ்­நாட்டை ஆளும் திமு­க­வும் இளங்­கோ­வ­னையே வேட்­பா­ள­ராக அறி­விக்க விரும்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் பின்­ன­ணி­யில் சென்­னை­யில் திமுக தலை­வ­ரும் முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டா­லினை காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன் நேற்று அண்ணா அறி­வா­ல­யத்­தில் சந்­தித்துப் பேசி­னார்.

இச்­சந்­திப்­பின் போது ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்தேர்­தல் பிர­சா­ரம் குறித்து விவா­திக்­கப்­பட்­டது.

இத­னைத் தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் பேசி­னார்.

"ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்­லி­கார்­ஜூன கார்கே ஆகி­யோர் நான் தேர்­த­லில் போட்­டி­யிட வேண்­டும் என விரும்­பி­னர். அவர்­க­ளது விருப்­பத்­துக்கு அடி­ப­ணிந்து நான் போட்­டி­யி­டு ­கி­றேன். ஈரோடு கிழக்­குத் தொகுதி­ யில் ஏற்­கெனவே திமு­க­வி­னர் பிர­சா­ரத்தை தொடங்­கி­விட்­ட­னர். அமைச்­சர்­கள் நேரு, முத்­து­சாமி உள்­ளிட்­டோர் பிர­சா­ரம் மேற்­கொண்­ட­தற்கு நன்றி.

"தமிழ்­நாடு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மீது மக்­கள் நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­ற­னர். இந்த நம்­பிக்கை கார­ண­மாக இடைத்­தேர்­த­லில் வெற்றி பெறு­வது நிச்­ச­யம்," என்று ஈ.வி.­கே.எஸ் இளங்­கோ­வன் தெரி­வித்­தார்.

இதன் பிறகு அங்­கி­ருந்து தி.நக­ரில் உள்ள மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி அலு­வ­ல­கத்­துக்கு சென்று கட்­சி­யின் அர­சி­யல் தலைமைக் குழு உறுப்­பி­னர் ஜி.ராம­கி­ருஷ்­ணனை சந்­தித்து அவர் ஆத­ரவு கோரி­னார்.

பின்­னர் விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் திரு­மா­வ­ள­வனைச் சந்­தித்து அவர் ஆத­ரவு கேட்­டார்.

அப்போது, "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

பெரியாரின் பேரன்

ஈ.வி.கே.எஸ் இளங்­கோ­வன் 38 ஆண்டு காலத்­திற்­குப் பிறகு தேர்­தல் களம் காண்­கி­றார். தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வும் உயர்­மட்ட முக்­கிய பொறுப்­பு­க­ளி­லும் இருந்­துள்ள இவர், தந்தை பெரி­யா­ரின் பேரன் ஆவார். இவர், பெரி­யா­ரின் அண்­ணன் கிருஷ்­ண­சா­மி­யின் மகன் ஈ.வி.கே.சம்­பத்- சுலோச்­சனா சம்­பத்­தின் மகன் ஆவார். இவ­ரது மக­னும் ஈரோடு கிழக்­குத் தொகுதி எம்­எல்­ஏ­வு­மான திரு­ம­கன் ஈ.வெ.ரா. மறை­வால் 38 ஆண்­டு­க­ளுக்கு பிறகு மீண்­டும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன் போட்­டி­யி­டு­கி­றார்.

மன­தில் பட்­டதை பேசக்­கூ­டி­ ய­வர் இவர். திமு­கவை முன்பு விமர்­சித்­த­தால் அதை வைத்து எதிர்க்­கட்­சி­கள் ஆதா­யம் தேட முயற்சி செய்­ய­லாம் என்­ப­தால் இந்­தத் தேர்­த­லில் அவர் போட்டி­ யிட தயக்­கம் காட்­டி­ய­தாக நம்பப்­ப­டு­கிறது.

ஆனால் திமு­க­வும் காங்­கி­ரஸ் மேலி­ட­மும் ஈ.வி.கே.எஸ் இளங்­கோவனை களத்­தில் இறக்க விரும்­பின.